Sunday 23 August 2015

சிங்கன்டா...!

இந்தியன் ஹோட்டல் ஒன்றில் ஒரு அமெரிக்கர் நுழைந்தார்.
”நிறுத்தாமல் அடுத்தடுத்து பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிடுபவர்களு க்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு.போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?”
என்று அறிவித்தார்.யாரும் அசையவில்லை.
நம்மாளு ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம்
கழித்து திரும்பி வந்தார். ”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார். அடுத்தடுத்து பத்து பொட்டலம் பிரியாணியை அவர்
காலி செய்து முடித்ததைப் பார்த்து,அமெரிக்கர் வியந்து போனார்.சொன்னபடி பரிசுத் தொகையை கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார். ”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பார்த்தேன்” என்றார்!!

~*~

No comments:

Post a Comment