Tuesday 20 March 2018

சாத்தானை படைத்தது யார்??

வகுப்பறையில் ஆசிரியை
மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார்,
உலகில் இருக்கும் அனைத்தையும்
படைத்தது கடவுளா ? என்று.
ஒரு மாணவன்

ஆமாம் என பதில் அளிக்கிறான்.
ஆசிரியர் : அப்படியெனில்,

சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
மாணவன் அமைதி காக்கிறான்.
சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப்
பார்த்து நான் உங்களை சில
கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவன் : 'குளிர்நிலை'
என்று ஏதேனும் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ
குளிரை உணர்ந்தது இல்லையா?
மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில்
தவறு.குளிர் என்ற
ஒன்று இல்லை.அது வெப்பத்தின்
பற்றாக்குறை. சராசரி வெப்பம்
குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.
இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர் : ஆம், இருக்கிறது.

மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும்
தவறு.இருள் என்ற
ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான்
இருள் என்கிறோம். உண்மையில்
ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம்
அதிகம் படிக்கிறோம்.

குளிரையும்
இருளையும் அல்ல. அதே போல்,
சாத்தான் என்று இவ்வுலகில்
எதுவுமில்லை. உண்மையில்
அது கடவுளின் மீது உள்ள
அன்பின் , நம்பிக்கையின்
பாற்றாக்குறை. அந்த மாணவன்
வேறு யாருமில்லை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

Wednesday 14 March 2018

கணவன் மனைவி

மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா". மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்".

யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !

இனி இவனை அடிக்க முடியாதுன்னு பெத்தவங்க மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றதுதான்

#திருமணம்

😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.

ஆனால்,

பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!

ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.

😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

உங்கள் கணவரை நேசியுங்கள்!
.
* அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.
.
* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
.
என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
.
* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.
.
* இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?
.
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.
.
* உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா?
.
உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
.
* நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!

😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐
மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

1. நிறைய அதிகாரம் இருப்பதால்.

2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.

3. இரண்டு அடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால்.
👍மணம் நிம்மதியோடு படித்து விட்டு .பிறருக்கும் அனுப்பி பாருங்கள்.வாழ்த்துவார்கள். வாழ்க வளமுடன். . நன்றி. நன்றி நன்றி.
😥😥😥😥😥😥😥

காமராஜர்

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.

உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.

காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

பத்திரிகையாளர்களோ அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன? என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர்.

உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா , "இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்" என்றாராம் ,

வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.

Pin drop silence....

அதைக்கண்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைகவிழ்ந்தனர்.

இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும் தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். ".

""மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்""

இது தான் தேர்தலில் தோற்றபிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது!!

இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும்?

காமராஜர் ஒரு முறை 💐 ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. 😚தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..😌

உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ 🐝ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... 🐝
ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...😊

பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது😝 பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.."

👌👌👌👌👌
கலெக்டர் தலை குனிந்தார்...

படிக்காத மேதை...

வறலாறு ஒரு நொடியில் நிகழ்வு

விலகி நிற்பவர்கள்
         வெல்லுவதில்லை
              வெல்ல நினைப்பவர்கள்     
                      விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...

இவர் தான் நிலவில்
         முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால்,
     முதன் முதலில் வைத்திருக்க
              வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான்
    நிலவுக்கு சென்ற
       அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர்.
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க்
    அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
     மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது
                         இணை விமானி...
இவர்கள் சென்ற
     அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,
     "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால்,
   ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...

"‘நிலவில் முதன்
   முதலில்கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம்.
கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக
    தாமதிக்கவில்லை...
        சில நொடிகள்தான்
                தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில்
      இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது,
       "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங்
        கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு,
     ஒரு நொடி தயக்கத்தில்
            மாற்றி எழுதப்பட்டது...
திறமையும்
      தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
      இன்று ஆல்ட்ரினை
            யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான்
     இந்த உலகம் நினைவில்
              வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல...
    தயக்கம்,
        பயம் இவை எந்த அளவுக்கு
           நம் வெற்றியை பாதிக்கும்
             என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை
     பார்க்கும்போதெல்லாம்
       இந்தச் சம்பவத்தை நினைவில்
             வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம்
    நம்முடைய மிகப் பெரிய
       வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே
     மிகப்பெரும் சாதனைகளை
         படைக்கிற வல்லமை
               உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம்,
      பயம்,
          கூச்சம் இவைதான்
                     நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய
        தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை
                 தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை
                     பாராட்டுவதில் தயக்கம்...
ஏன்,
      சிலருக்கு இந்த தகவலை
           நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை
        செய்ய தயங்கினால்,
            தவறானதை தான் செய்து
                             கொண்டிருப்போம்...
எனவே,
           நல்ல விஷயங்களில்...
                   தயக்கத்தை தவிர்ப்போம்..

*                 *                   *

Friday 9 March 2018

Complete and finish

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்,

ஆங்கிலத்தில் "complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.

கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்.

அப்போது அறிஞர் அண்ணா கூறினார்....

"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "complete ".

அதுவே "நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "finished ".

அதுவே அந்த சரியான பெண் உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்கை "completely Finished " என்றார்.

இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்.

படித்ததில் பிடித்தது.

Wednesday 7 March 2018

கோபம் vs கொலைவெறி

பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே.!”

அப்பா ஒருகணம் யோசித்தார்.
“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.
“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.
மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.
“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டிருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.
“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல.
நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா… எத்தனை தடவை இதே நம்பருக்கு போன் பண்ணுவீங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”

போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.
“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர்

இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.
“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…
இல்ல வேற ஏதாவதை திங்கிறியா…? அறிவில்ல உனக்கு…?
இன்னொரு தடவை போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ…
அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!”

மகன் அப்பாவிடம் சொன்னான்.
“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.
“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”

Tuesday 6 March 2018

பச்சத் தண்ணி பத்மநாபன்

*   நேர்மைக்கு   என்றுமே   அழிவில்லை *              

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர்
‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.
ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட
அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால்
அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.
ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர்
தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

“இறைவா…
என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன்.
நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும்.
நீங்களும் எந்த சூழலிலும்
நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து
என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று
நா தழு தழுக்க சொன்னார்.

இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க,
கடைசி மகள் ப்ரியா மட்டும்
கோபத்தில் வெடித்தாள்.
ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி
ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான்
பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே
அவளுக்கு கோபம்.

“அப்பா….
உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல்
நீங்கள் எங்களை விட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று
நீங்கள் கூறியவர்கள் எல்லாரும்
அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்து விட்டு சென்றிருக்கிறார்கள்

ஆனால்
நாம் இருக்கும்
இந்த வீடு கூட
வாடகை வீடு தான். ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம் போதும்.
உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்….”
என்றாள்.

அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின்
உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.

காலங்கள் உருண்டன.

கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா
ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு பணிக்கு
அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள்.
அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே
பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்து விட்டாலும்
ஒரு பார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர்.
பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.

ப்ரியாவின் முறை வந்ததும்
உள்ளே அழைக்கப்பட்டாள்.

அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர்
“உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா ???” என்றார்.

“ஆமாம்… சார்…”

உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் ….. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா ????”

“ஆமாம்… சார்…” என்றாள்
சற்று நெளிந்தபடி.

“ஒ… நீங்க அவரோட டாட்டரா ??
இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா…
இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா
அதுக்கு அவரும்
ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது
நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னை விட அதிகமா கோட் பண்ணின
நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம
அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி
எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு
நான் இல்லை.
இந்த கம்பெனியும் இல்லை.
ஏன்னா…
என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது.
அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி,
இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது.
ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்….”

“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த
இதை விட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா…
யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில்
ஜாய்ன் பண்ணிக்கலாம்….” என்றார்.

அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு
வேலை கிடைத்தது. அலுவலகம் வந்து செல்ல
ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள்.
பி.எப்.,
இன்சென்டிவ், ரெண்ட் அலொவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும்
ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.

இரண்டு ஆண்டுகள் சென்றன…
ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.

இதற்கிடையே அவர்கள்
சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா
செய்து விட,
அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS
ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.

மாதம்
பத்து லட்ச ரூபாய் சம்பளம்.
கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து
சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.

அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.

“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள். ???”

கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.

“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை.
அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக
அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும்
அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”

“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க ???”

“என் அப்பா இறக்கும் தருவாயில்
அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன்.
என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன்.
இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்து விட்டேன்.”

“அப்போது
என் தந்தை என்னிடம் கேட்டுக்கொண்டது என் அடியொற்றி செல்வீர்களா என்பதே  ??”

“ஒவ்வொரு கணமும். என் வீட்டு வரவேற்பறையில் அவருடைய படத்தை பெரிதாக மாட்டியிருக்கிறேன். அந்த ஆண்டவனுக்கு பிறகு
எனக்கு எல்லாமே
என் அப்பா தான்….” கண்களை துடைத்தபடி சொன்னாள்
ப்ரியா.

நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா ???

உண்மையான நல்ல பெயரை சம்பாதிப்பது
என்பது மிக மிகக் கடினம்.
அதன் வெகுமதி உடனே வருவதில்லை. ஆனால்
அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.

நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது,
கடவுளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை – இவையெல்லாம் தான்
ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன. கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.

உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை
விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்…

*“பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதை. விட      புண்ணியத்தை சேர்க்கவேண்டும்”* என்று.

*  நிறைய உண்மை கலந்த கதை இது !!!   *   நேர்மையாக   இருப்பதால்    கண்ணீர்  
தான்   பரிசு   
என்று   மனம்  கலங்காதீர்கள் * ....*உங்கள்    நேர்மை    தான்    உங்கள்   குடும்பத்தை    நிஜமாகக் காப்பாற்றும்*   ,    *நமது   நாட்டையும்    நேர்மை தான்    காப்பாற்ற   வேண்டும் *.....ஆகவே   மகிழ்ச்சியாக  ,   நேர்மையாக    சமுதாயப்பணியாற்றுவோம்*  ....

லஞ்சம்    இல்லா   சமுதாயத்தை  நிச்சயமாகவே   உருவாக்குவோம்

💙🙏💚