Tuesday 23 November 2021

நாத்திகனின் தியானம்

ஒரு நாத்திகர் என்னிடம் வந்து, 
"நானும் தியானம் செய்ய முடியுமா?",
என்று கேட்டார்.

நான் சொன்னேன், 
"கடவுளை நம்பினால்தான் தியானம் செய்ய முடியும் என்ற கருத்து நிலவி வருகிறது. அது ஒரு முட்டாள்தனமான கருத்து! தியானத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை" - என்று. 

இன்னும் சொல்லப்போனால், எதையும் நம்பாதவர் எளிதில் எண்ணங்களை கடந்து போய்விட முடியும்.

ஒன்றின் மேல் விசுவாசம் வைத்திருப்பவன், அந்த நம்பிக்கையை பலமாக பற்றிக்கொண்டு இருப்பதால் அந்த நம்பிக்கையே மனதினால் கடக்க முடியாத ஓர் எண்ணமாக மனதில் படிந்து விடுகிறது.  

விசுவாசம் என்பது மனதின் ஒரு பகுதி! நீங்கள் தீவிரமான கடவுள் நம்பிக்கையோடு இருந்தால், உங்களால் மனதை கைவிட முடியாது. 

மனம் தீவிரமாக உள்ள இடத்தில் தியானம் நிகழாது. எனவே அந்த இடத்தில் நீங்கள் "பக்தி" என்ற படிமானத்தை தாண்டி வர வேண்டியுள்ளது. 

கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு உள்ள பக்குவம்,  இந்த  படிமானம் என்கிற தொல்லை இல்லாமல் செய்துவிடுகிறது!!

~~ஓஷோ