Thursday 17 June 2021

உயர்திரு. நந்தக்குமார் - வருவாய் இணை ஆணையர்

அப்போது 8ம் வகுப்பு டிராப் அவுட்... 

இப்போது வருமான வரித்துறை இணை ஆணையர்...!

“ஸ்கூல்ல நான் ரொம்ப பிரபலம். நந்தகுமார்னா யாருக்கும் தெரியாது; ‘தூங்குமூஞ்சி’ன்னா கரெக்ட்டா சொல்லிடுவாங்க. பள்ளிக்கூடத்துக்கு உள்ளே  நுழைஞ்சவுடனே எங்கிருந்துதான் வருமோ தூக்கம்... உக்காந்தவுடனே தூங்கிருவேன். டீச்சர் சொல்லிப் பாத்தாங்க, அடிச்சுப் பாத்தாங்க. கடைசியா ஒரு பெஞ்சை  காலிபண்ணிக் கொடுத்து, ‘படுத்து தூங்குப்பா’ன்னு சொல்லிட்டாங்க...’’ - சிரிக்கிறார் #நந்தகுமார். நந்தகுமார், இந்திய வருமான வரித்துறையின் இணை  ஆணையர். தற்போது திருச்சி மண்டலத்தில் பணிபுரிகிறார். சென்னை ஆவடியில், விளிம்புக் குடும்பத்தில் பிறந்து, ஒவ்வொரு நகர்விலும் தடுக்கி விழுந்து,  கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனை மனிதராக உயர்ந்து நிற்கும் இவரின் கதை உற்சாக நரம்புகளை முறுக்கேற்றும் சக்திமிக்கது. ‘‘அஞ்சு வயசுக்குள்ள  சின்னம்மை, மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாய்டுன்னு உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு. எப்பவும் சோர்வாவே  இருக்கும். படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது. புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது.

போர்டுல எழுதிப் போடுறதை எழுதமுடியாது. அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று  சொல்லப்படுற ‘கற்றல்குறைபாடு’தான்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும்போது தான் தெரியவந்துச்சு. ‘தாரே ஜமீன் பர்’ படத்தில ஒரு சின்னப் பையனுக்கு  இருக்குமே, அதே பிரச்னைதான். இது நோயில்லை; உளவியல் பிரச்னையும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சிக்கல். இதுக்கு மருத்துவத்துறை இன்னும்  தீர்வு கண்டுபிடிக்கல...’’ - நிதானமாகப் பேசுகிறார் நந்தகுமார். ‘‘ஒருவழியா 8ம் வகுப்பு வரைக்கும் வந்துட்டேன். அதுக்குமேல என்னைச் சிரமப்படுத்த அப்பா  விரும்பல. ‘படிப்புதான் வரல... லாட்டரிச் சீட்டு வியாபாரம் பண்ணியாவது பொழச்சுக்கோ’ன்னு ஆவடியில இருந்த கடையில உக்கார வச்சுட்டார். தெருக்கள்ல  போய் விப்பேன். கடையையும் பாத்துக்குவேன். வயது ஆக ஆக, ஸ்கூலுக்குப் போற பிள்ளைகளைப் பாக்க ஆசையா இருக்கும்.

இன்னொரு பக்கம், ‘அவன்கூடப் பழகுனா நீயும் ஊர்சுத்திப் பயலாயிடுவே’ன்னு சொல்லி என்கூட பழகுற பசங்களை அவங்க பேரன்ட்ஸ் அடிப்பாங்க. படிக்காம  இருக்கிறது தப்புன்னு உணர்ந்தேன். ஆனா, திரும்பவும் பள்ளிக்கூடம் போறதுக்கு மிரட்சியா இருந்துச்சு. அப்போ தான் அமல்ராஜ்னு ஒரு நண்பன், ‘பள்ளிக்கூடம்  போய்தான் படிக்கணும்னு இல்லைடா, வீட்டில இருந்துக்கிட்டே தேர்வு எழுதலாம்’னு சொன்னான். அதுதான் முதல் பொறி. உடனடியா அப்ளை பண்ணினேன்.  கடையில இருந்துக்கிட்டே எட்டாவது பாஸ் பண்ணிட்டேன். அடுத்து பத்தாவது... டியூஷன் போகக்கூட நேரம் கிடைக்காது. எழுதி எழுதிப் பாப்பேன். நாலு தடவை  தப்பா எழுதினா, அஞ்சாவது தடவை சரியா எழுதிடுவேன். மத்தவங்க மாதிரி வேகமா எழுத வராது. எல்லோரும் ரெண்டரை மணி நேரத்தில 40 கேள்விக்குப்  பதில் எழுதினா என்னால 15 கேள்விக்குத்தான் எழுதமுடியும். கையெழுத்தும் சரியா இருக்காது. ஆனா விடையை சரியா எழுதுவேன்.

இப்படித்தான் பத்தாம் வகுப்பை முடிச்சேன். கணக்குல 92...’’ - வியக்க வைக்கிறார் நந்தகுமார். ‘‘திடீர்னு லாட்டரிச் சீட்டை தடை பண்ணிட்டாங்க.  கடையை மூடிட்டு சித்தாள் வேலைக்குப் போனேன். என் உடல்வாகுக்கு செங்கலும், மண்ணும் சுமக்க முடியலே. ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அதுவும் சரியா  வரல. அப்புறம் சவுண்ட் சர்வீஸ் கடை. அங்கிருந்து டி.வி. மெக்கானிக் சென்டர். வாழ்க்கையில ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அலையா அலைஞ்சேன்.  கடைசியா மெக்கானிக் ஷாப். அங்கே வேலை செஞ்சுக்கிட்டே +2வுக்கு அப்ளை பண்ணினேன். அந்த வருஷம் எக்கனாமிக்ஸ் சிலபஸ் மாறிடுச்சு. அது தெரியாம  பழைய புக்கையே படிச்சதால அந்தப் பாடத்தில ஃபெயிலாகி, அட்டெம்ட்ல பாஸ் பண்ணினேன். அடுத்து கல்லூரி போகணும். இப்போ அப்பாவோட மனநிலையும்  மாறிடுச்சு. ‘சரி.. வேலைக்குப் போகவேணாம், படிடா’ன்னு சொல்லிட்டார். எனக்கு பி.எஸ்சி கணிதம் படிக்க ஆசை.

ஆனா தனித்தேர்வரா எழுதினதால எந்தக் கல்லூரியிலயும் இடம் கிடைக்கலே. வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில, ‘பி.ஏ. ஆங்கிலம் இருக்கு,  எடுத்துக்கிறியா’ன்னு கேட்டாங்க. சேந்துட்டேன்...’’ என்கிறார் நந்தகுமார். கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் நந்தகுமாரின் ‘ஆங்கில அறிவைப்’ பார்த்து  மிரண்டு போன பேராசிரியர்கள், ‘நீயெல்லாம் படிச்சு பாஸ் பண்ணமுடியாது... ஒர்க்ஷாப்புக்குப் போய் ஒழுங்கா தொழிலைக் கத்துக்கோ’ என்று அறிவுரை சொன்னார்கள். ‘‘போகப் போக சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். முதல் செமஸ்டர்... தேர்வுக்கு முதல் நாள் அம்மை  போட்டுருச்சு. எழுந்து உக்காரக்கூட முடியலே. தட்டுத்தடுமாறி கல்லூரிக்குப் போயிட்டேன். ஆனா உள்ளே அனுமதிக்கலை. போராடி அனுமதி வாங்கி தனியா  உக்காந்து எழுதுனேன். அடுத்த செமஸ்டர் நேரத்தில பெரிய விபத்து. அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.

அந்த செமஸ்டர்ல ஆங்கிலத்தில டிஸ்டிங்ஷன். இறுதியா, என் பேட்ச்ல அரியர் இல்லாம டிகிரி வாங்கின ஒரே ஆள் நான் மட்டும்தான். பி.ஏ முடிச்சதும்  எம்.ஏவுக்கு நிறைய கல்லூரிகளுக்கு அப்ளை பண்ணினேன். மாநிலக் கல்லூரியில ‘வராண்டா அட்மிஷன்’தான் கிடைச்சுது. வராண்டா அட்மிஷன்னா, ‘போனாப்  போகுது’ன்னு கொடுக்கிறது...’’ என்கிற நந்தகுமாருக்கு அங்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள்தான் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளை எல்லாம்  அறிமுகம் செய்தார்கள். ‘‘எல்லாரும் தீவிரமா பிரிப்பேர் பண்ணினோம். ஆனா அவங்க வேகத்துக்குப் படிக்க முடியலே. இடையில, ‘ஆபீசர்ஸ் டிரெயினிங்  அகாடெமி’ நடத்தின ஒரு தேர்வை எழுதுனேன். என்.சி.சி.யில இருந்ததால அந்த வாய்ப்பு கிடைச்சுச்சு. அதுல பாஸ் பண்ணி, ஆர்மியில செகண்ட் லெப்டினென்ட்  வேலைக்குத் தேர்வானேன். ஆனா பயிற்சிக்குப் போறதுக்கு முன்னாடி திரும்பவும் பெரிய விபத்து. டாக்டர்கள் கை விட்டுட்டாங்க.

54 கிலோவா இருந்த எடை 38 கிலோவாயிடுச்சு. மருத்துவர்களுக்கே புரியாத புதிர். ஆனா நான் மனம் தளரலே. அதிலிருந்தும் மீண்டு வந்தேன். ஆனா, வேலை  கைவிட்டுப் போயிடுச்சு. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுதி பாஸ் பண்ணினேன். ஏ.எஸ்.ஓவா வேலை கிடைச்சுச்சு. ஆனா அதில்லை என் இலக்கு. அடுத்து குரூப்-1  எழுதினேன்... வெற்றி! கூட்டுறவுத்துறையில துணைப் பதிவாளரா 3 வருஷம் வேலை செஞ்சேன். டெபுடி கலெக்டர் ரேங்க் வர்ற நேரம், யு.பி.எஸ்.சி பாஸ்  பண்ணிட்டேன். ஐ.பி.எஸ் கிடைச்சுச்சு. ஆனா எனக்கு தமிழ்நாடு கேடர் கிடைக்கலே. அதனால ஐ.ஆர்.எஸ்ல (இந்திய வருவாய்ப்பணி) சேர்ந்துட்டேன்...’’ -  சிலிர்க்க வைக்கிறார் நந்தகுமார். இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குப் பயணிக்கிறார். தன் கதையைச் சொல்லி, ‘நானே  சாதித்திருக்கிறேன்... நீங்களும் சாதிக்கலாம்’ என்று நம்பிக்கையூட்டுகிறார். மாணவர்களிடம் உற்சாகம் கிளர்ந்தெழுகிறது. ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கும்  வகுப்பெடுக்கிறார். நந்தகுமாரின் காதல் மனைவி விஜயலெட்சுமி, மெக்கானிக்கல் எஞ்சினியர். இவர்கள் அன்பில் விளைந்த குட்டிப்பையன் சரண், ஸ்கூலில் படிக்கிறான்.

Saturday 12 June 2021

பொய் பேசாதவர்

ஒரு சாமியார் ஒருவர், 
*ஒரு நாள் ஒரு ஊருக்குச் சென்றபோது*,
*“இந்த ஊரில் பொய் பேசாதவர் யாராவது உண்டா? என்று கேட்டபோது, சுப்ரமணியன் என்பவரது வீட்டை காட்டினார்கள்.*

*''அதோ அந்த மாடி வீட்டுதான். நல்லவர், சாது, பக்தர். லட்சாதிபதி. நான்கு பிள்ளைகள்''*

*அவர் வீட்டுக்கு யோகி சென்றதும் உட்கார்ந்திருந்த சுப்பிரமணியன் உடனே எழுந்தார். ஓடி வந்து ஞானி முன் விழுந்து வணங்கினார். அவரை ஆசனத்தில் அமர்த்தினார்,*  

*”ஐயா, இங்கு உணவு அருந்தவேண்டும் '' என வேண்டினார். அவருடைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும் யோகிக்கு பிடித்துவிட்டது. ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம் உணவு அருந்தலாம் என்று எண்ணினார். பேச்சு கொடுத்தார்.* 

*“உங்களிடம் எவ்வளவு செல்வம் உண்டு?”*

*“சுவாமி! ரூபாய் 22,000/- உண்டு”*

*குழந்தைகள் எத்தனை பேர்?” 

“சுவாமி! ஒரே புதல்வன் தான்” 

“உமக்கு வயது என்ன?” 

“சுவாமி! எனக்கு வயது 4 வருஷம்.

சாமியாருக்கு கோபம் வந்தது.

இவரைப் போய் பொய் பேசாதவர் என்கிறார்களே?''.  

எனவே கோபத்தோடு பேசினார்.

*“ எதற்கு ஒன்றுமில்லாத விஷயத்துக்கு புளுகுகிறீர்கள். நீர் பேசுவ தெல்லாம் நம்பும்படியாக இல்லையே. இங்கு நான் உணவு பூசித்தால், அது என் தவத்தை அழித்து என் குணத்தை மாற்றிவிடும். நான் பொய் சொல்கிறவர்கள் வீட்டில் புசிப்பதில்லை.'' சாமியார் எழுந்தார்.*

*சாமியார் காலில் விழுந்து, “ சாமி, நான் பொய் பேசவில்லை. சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்து உண்மை உணரவேண்டும்'' என்று சொல்லி தனது வரவு செலவு கணக்கு புத்தகத்தை எடுத்துக் காட்டினார்.* 

*அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது.*

*“முதலியார், உங்கள் கணக்குப் புத்தகமே '' உமது சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று காட்டும்போது எப்படி நீங்கள் என்னிடம் 22,000 ரூபாய் என்று பொய் சொன்னீர்கள்.?*
*“சுவாமி! ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது என்றாலும் பெட்டியில் உள்ள பணம் எனதாகுமா? இதோ பாருங்கள், நான் செய்த தருமக் கணக்கில் இதுவரை 22,000 ரூபாய் தான்; செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது? இப்போதே நான் இறந்தால் பெட்டியில் உள்ள இந்த லட்ச ரூபாய் என்னுடன் வராதே. என்னோடு வருவது நான் செய்த தருமம் ஒன்று தானே அது 22000 ரூபாய் தானே. அது தான் என் சொத்து.” என்று சொன்னேன்.*

*சாமியார் ''ஆஹா என்று சந்தோஷமாக தலையாட்டினார்.* 

*' உங்களுக்கு நாலு பிள்ளைகள் இருக்கும்போது ஏன் ஒன்று என்று சொன்னீர்?.*

*''சுவாமி! எனக்குப் பிறந்தது 4 பிள்ளைகள். உண்மையில் ஒருவன் தான் என் பிள்ளை ''*

*''முதலியார் என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?*

*“சுவாமி! இதோ விளக்குகிறேன். முதலியார் '' '' மகனே! நடேசா ” என கூப்பிட்டார்.*

 *''அப்பா நான் சீட்டு விளையாடுகிறேன். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்'' என்று பதில் வந்தது.*

*“மகனே! வடிவேலா'' என முதலியார் குரல் கொடுத்தார்.*

*“ஏன் இப்படிக் கத்தறே , வாயை மூடிக்கொண்டிரு” என்று ஒரு குரல் பதிலாக வந்தது.*

*“என் மகனே! சிவராஜா என்று ஒரு குரல் கொடுத்தார் முதலியார்.* 

*'' உன்னோடு பேச என்னால் ஆகாது, என்று கோபமாக கத்துவது காதில் விழுந்தது.*

*''அப்பா குமரேசா '' என்று ஒரு முறை முதலியார் கூப்பிட்ட கணமே ஒரு பையன் ஓடிவந்தான். அப்பாவையும், எதிரே இருந்த சாமியாரையும் தொழுது வணங்கினான்.*  

*முதலியார் சாமியாரிடம் “ சுவாமி! அந்த மூவரும் என் புதல்வர்களா? என் கருத்துக்கு முரண் ஆனவர்கள் என் பிள்ளைகளா? போன பிறப்பில் நான் செய்த பாவங்களின் உருவங்கள். இவன் ஒருவன் தான் என் பிள்ளை” என்று கருதுவதால் எனக்கு ஒரு பிள்ளை என்றேன்.*

*''முதலியார் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏன் உன் வயது விஷயத்தில் நம்பும் படியாக சொல்ல வில்லை? ''*

*“சுவாமி! ஒவ்வொரு நாளும் நான் ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு செய்கின்றேன். இறைவனைப் பற்றி நினைக்காத / பேசாத நாள் எல்லாம், பிறவா நாள் தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்த வகையாகப் பார்த்தால், அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும், ''எனக்குச் சொந்தமான வயது 4 வருஷம் தானே'' சரியா ஐயா?*

முதலியார் நீங்கள் சொன்னது அப்பட்டமான உண்மை.

  *1.தருமம் செய்த பணம் தான் ஒருவனுக்கு சொந்தம்.*

*2.தாய்-தந்தை கருத்தை / பேச்சை கேட்கின்றவர்களே மகன் / மகள்*

3. இறைவனுக்கு பூசை செய்த நேரமே ஒருவனின் நேரம்.

உங்கள் வீட்டில் உணவு உண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வாழ்த்தினார் சாமியார்.*

*இந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்*

வாழ்க வளமுடன்!

சும்மா - சொல்லாடல்

*சும்மா*==  ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃😃

*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. 

*அது சரி *சும்மா* *என்றால் என்ன??*

*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*

*"சும்மா"* ======
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால்  நம்ப முடிகிறதா?*

*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.

*1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா?
( *அமைதியாக/Quiet*)

*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*)

*3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!*
 (அருமை/in fact)*

*4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு*
 நினச்சியா*?
 (இலவசமாக/Free of cost)

*5. *"சும்மா" கதை அளக்காதே?*
 (பொய்/Lie)

*6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* - 
(உபயோகமற்று*/Without use)

*7. *"சும்மா"*  *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)*

*8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*.
 (எப்போதும்/Always)

*9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*- 
(தற்செயலாக/Just)

*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது* 
(காலி/Empty)

*11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.*
(மறுபடியும்/Repeat)

*12.ஒன்றுமில்லாமல்  *"சும்மா"  போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)

*13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*- 
 (சோம்பேறித் தனமாக/ Lazily)

*14.அவன்  *"சும்மா" ஏதாவது உளறுவான்* -
(வெட்டியாக/idle)

*15.எல்லாமே  *"சும்மா" தான் சொன்னேன்*-
(விளையாட்டிற்கு/Just for fun)

*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* 
*என்கிற ஒரு சொல். நாம்  பயன் படுத்தும் இடத்தின் படியும்  தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது   *"சும்மா"* இல்லை!)

Fb la irunthu suttathu...😃😄

Sunday 6 June 2021

உருவ வழிபாடு

உருவ வழிபாடு.

இரண்டு இஸ்லாமியர்கள் ரமண மகரிஷியிடம் வந்து கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் விக்கிரங்களை வழிபடுவது முறையா?” என்று கேட்டனர்.

பகவானின் பதில் பின்வரும் உரையாடலில்

மகரிஷி: கடவுளை விட்டு விடு. ஏனெனில் அவரைப் பற்றி நமக்குத் தெரியாது. உனக்கு உருவம் இருக்கிறதா?

பக்தர்: ஆமாம். இந்த உடல்தான் நான். எனக்குக் குறிப்பிட்ட பெயர் இருக்கிறது.

மகரிஷி: அப்படியானால் நீ குறிப்பிட்ட உயரம், தாடி, அவயவங்கள் கொண்ட மனிதன் அல்லவா?

பக்தர் கண்டிப்பாக!

மகரிஷி: அப்படியானால் இதேமாதிரி உன்னை நீ தூக்கத்திலும் காண்கின்றாயா? மேலும், நீ உடலென்றால் மரணத்திற்குப் பிறகு ஏன் உடலைப் புதைக்கின்றார்கள்? உடல்தான் புதைக்கப்படுவதை மறுக்க வேண்டும் அல்லவா?

பக்தர்: இல்லை. நான் இந்த ஜடவுடலில் இருக்கும் சூக்ஷ்ம ஜீவன்.

மகரிஷி: இப்பொழுது நீ உண்மையாகவே உருவமற்றவன் என்று உணர்கின்றாய். ஆனால் தற்பொழுது உடலை நீதான் உடல் என்று நினைக்கின்றாய். உருவமற்ற நீ உன்னை உருவாகக் கருதும் போது ஏன் கடவுளை உருவம் கொண்டவராக எண்ணி வழிபடலாகாது? என்றார்.

பிராணவாயு எனும் பூட்டாங்கயிறு

1989  அருப்புக் கோட்டை   சிவன் கோயிலில் நடைபெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சாமி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு.

அவர் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்பதையும் தாண்டி, மிகச் சிறந்த தமிழ் அறிஞர்.

வேதாந்த தத்துவங்களை எளிதில் புரியும் உதாரணங்களோடு கூறுவதில் அவருக்கு நிகர் அவரே.

அன்று அவர் கூறிய ஒரு தத்துவம். 

மாட்டு வண்டி உங்கள் அனைவருக்கும் தெரியும். வண்டிக்கு அறிவு கிடையாது. மாட்டுக்கு அறிவு உண்டு. ஆனால் அறிவுள்ள மாட்டால் வண்டியை தானேபூட்டிக் கொள்ள முடியாது. அறிவில்லாத வண்டியாலும் தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது. 

வண்டிக்கு சொந்தக்காரன் ஒருவர் உள்ளான். அவன் தான் பூட்டாங்கயிறால்  வண்டியையும்  மாட்டையும் இணைத்து இயக்குகிறார்.  பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் வண்டியையும் மாட்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுவார். 

நம் உடலுக்குப் பெயர் அசித்து.  ஆன்மா பெயர் சித்து. ஆன்மாவுக்கு அறிவு உண்டு. உடலுக்கு அறிவு கிடையாது. இரண்டும் தானே இணைந்து செயல்பட முடியாது. 

இறைவன் என்னும் வண்டிக்காரன், 
பிராண வாயு (ஆக்ஜிஸன்) என்னும் பூட்டான் கயிறால்  உடலையும் ஆன்மாவையும் இணைத்து இயக்கிக் கொண்டு உள்ளார். வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுகிறார். அதற்கு மரணம் என்று பெயர். மரணம் வரும்வரை  சரணம் சொல்ல வேண்டும் என்றபோது கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது. 

பிராண வாயு என்னும் ஆக்சிஸனுக்காக இன்று  மக்கள் அல்லல் படுவதை நினைத்தபோது திரு வாரியார் சாமி அவர்களின் கதை நினைவுக்கு வந்தது.  

பூட்டாங்கயிறு முக்கியமாச்சே.

படித்ததில் பிடித்தது.