Wednesday 28 October 2015

எடை

யானையின் எடையை எப்படி அறிவது?

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ”அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை” என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்...

~*~

Thursday 22 October 2015

வியாபரம் தர்மம்...!

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு
வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை
வாங்க அவளை கூப்பிடுகிறாள்.
" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
" ஓரணாம்மா"
"ஓரணாவா....? அரையணாதான் தருவேன்.
அரையணான்னு சொல்லி நாலு கட்டு
கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா".
" அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம்
பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண்
கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம்
சென்றுவிட்டு
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா"
என்கிறாள்.
"முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான்
தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா
உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு
கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்
வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று
அந்த தாய் கேட்க
"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு
வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு
தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். "
இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம்
கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த
தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
ரெண்டரையணா வருதும்மா.....? என்று கேட்க
அதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,
தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று
கூறினாள்...!!!

~*~

Friday 9 October 2015

புத்தி



அது ஒரு பயங்கரமான கார் ஆக்ஸிடெண்ட் இரண்டு கார்கள் மோதி, கார்களில் இருந்த ஒரு வாலிபனும் ஒர் வாலிப பெண்ணும், எந்த ஒரு பெரிய காயங்கள் இன்றி காரில் இருந்து தப்பி, கஷ்டப்பட்டு தவழ்ந்து வெளியே வந்தனர்.
கார்களுக்குகோ பயங்கர சேதாரம் ஆனால் அவர்களுக்கோ ஓன்றும் பெரிய அடி காயங்கள் ஏதும் இல்லை பெறும் வியப்பு கலந்த சந்தோஷம் இருவருக்கும்.
அந்த வாலிபனிடம் பெண் சொன்னாள் பாருங்க நம்ம கார்கள் எந்த அளவுக்கு அடையாளம் தெரியாமல் நொறுங்கி போகிறுக்கிறது ஆனால் என்ன ஆச்சிரியம் பாருங்க நமக்கு ஒன்னும் ஆகவில்லை.
நான் நினக்கிறேன் இது நமக்கு கடவுளின் வழிகாட்டுதல், ஆசிர்வாதம். எனவே நாம் நல்ல நண்பர்களாக முடிந்தால் வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம். நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்று கேட்டாள்.
அதற்கு அவன் பதில் சொன்னான். நான் நீங்கள் சொல்வதை 100% ஒத்துக் கொள்கிறேன். இது கடவுளிடம் வந்த சிக்னல் தான் என்று ஒத்துக் கொண்டான்.
தன் காரை சுற்றி பார்த்த பெண் அதில் இருந்த அவள் ஷாப்பிங் பேக்கை வெளியே இழுத்து பார்த்தாள் அதில் இருந்த வைன் பாட்டில் உடையாமல் இருந்ததை பார்த்து சந்தோஷம் கொண்ட அவள், அவனை பார்த்து சொன்னாள். இங்க பாருங்க மீண்டும் என்ன அதிசயம் காரோ இந்த அளவு டேமேஜ் ஆகி இருக்கிறது ஆனால் இந்த வைன் பாட்டில் சிறிது கூட உடையாமல் இருக்கிறது . இதுவும் கடவுளின் ஒரு சைன் தான் நமக்கு.
நாம் உயிர் பிழைத்து எதிர்காலத்தில் நாம் நல்ல படியாக சேர்ந்து வாழ வேண்டும் என்று அதை நாம் இன்று கொண்டாட கடவுள்தான் இதை உடைக்காமல் வைத்துள்ளார்.
இந்தாங்க முதலில் இதை நீங்கள் திறந்து உங்களுக்கு வேண்டிய அளவு குடித்து விட்டு சிறிய அளவில் எனக்கு தாருங்கள் என்றாள்.
நம்ம ஹீரோவும் அதை ஆமோதித்து விட்டு தாகம் வேற எடுத்ததால் முக்கால் பாட்டிலையும் காலி செய்துவிட்டு மீதியை அவளிடம் கொடுத்து குடிக்க சொன்னான்.
அதற்கு அந்த பெண் அமைதியாக பாட்டிலை வாங்க மறுத்தாள். ஏன் உனக்கு கொஞ்சம் கூட வேண்டாமா என்று கேட்டான்.
இல்லை போலீஸ் வந்து இந்த ஆக்ஸிடெண்டை விசாரித்து விட்டு போகும் வரை குடிக்க வேண்டாம் அது வரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று வெகு ஸ்மார்ட்டாக பதில் சொன்னாள்.

~*~

தூதன்

கடவுள் நம் 'குடி'மக்களை பார்த்து பொறாமை கொண்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த , டாஸ்மார்க் கடை'லன்னு பார்த்துட்டு வர, தன்னோட கிங்கரன் ஒருத்தனை மனுச ரூபத்துல பூமிக்கு அனுப்புறார்..
அவனும் டாஸ்மார்க் வந்து உள்ளே சென்று ஆர்டர் செய்தான்,
5 பீர் முழுவதும் முடிந்தது,
ஒரு வித்தியாசமும் தெரியாததால் மேலும்
தொடர்ந்தான்,
2 ஃபுல்.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..
மீண்டும் ஆரம்பிதான் ,
2 பீர் ..
கடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல் , கேடடார் ..
"யார் யா நீ..? ஏரியாவுக்கு புதுசா தெரியுர...! இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல? சரியான மொடாக் குடியனா இருப்ப போல...?
மறுபடியும் கேட்குற ?
அதற்கு அவன்
"நான் தான் கடவுளின் தூதன்..!" எனக்கு இந்த போதையெல்லாம் ஒன்றும் செய்யாது" என்றான்.
கடைகாரர் : "தோ டா ..!
அவனவன் குடிச்சாலே நான் தான் கடவுள்'ன்னு சொல்லுவான்....!!
தொரைக்கு இப்ப தான் ஏற அரம்பிச்சி இருக்கு..! அதான் புதுசா தூதன்னு சொல்லுறாரு....!
நடக்கட்டும் ..! நடக்கட்டும் ..!"

~*~

புண்ணியவான் ...

ஒரு ஓடக்காரன் இருந்தான். ஆற்றைக் கடக்க கொள்ளைப் பணம் வசூலிப்பான்.
மக்கள் எல்லோரும் திட்டுவார்கள். அதையெல்லாம் அவன் கண்டு கொள்ள மாட்டான். மக்களும் வேறு வழியின்றி அவன் கேட்கிற பணத்தைக் கொடுத்து ஆற்றைக் கடந்து செல்வார்கள்.
அவனுக்கு அந்திமக் காலம் வந்தது. மக்கள் தூற்றினார்கள். இவனுக்கு நற்கதியே கிடைக்காது என்று.
இறக்கும் தருவாயின் தன் மகனை அழைத்தான்.
மகனே, நான் உயிரோடு இருக்கையில் செய்த செயல்களுக்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன்.
மக்கள் ஒருவரும் என்னை நல்லவிதமாகச் சொல்லியதே இல்லை. ஏச்சும் பேச்சும்தான் கேட்டிருக்கிறேன்.
இறந்த பின்னராவது மக்கள் என்னை நல்ல விதமாகப் பேசும்படி செய்." என்று கூறி உயிர்விட்டான்.
மகனும் யோசித்தான். தந்தை பார்த்த தொழிலையே அவனும் செய்து கொண்டு, ஆனால் தந்தையை விட இரண்டு மடங்கு பணம் வசூலித்தான்.
இப்பொழுது மக்கள் சொன்னார்கள்,
"இவனுக்கு இவன் தந்தை எவ்வளவோ மேல். பாவம் புண்ணியவான் அதுக்குள்ள போய்ச் சேர்ந்துட்டான்." என்று..!

~*~

கடற்பேய்

நள்ளிரவு நேரம்.
கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று பேர் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள். திடீரென்று ஒரு பேய் படகில் வந்து குதித்தது.
மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது. "உங்கள் மூன்று பேரையும் சாப்பிட போகிறேன்" என்றது.
மூன்று பெரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.
ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது.
"உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை.
நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்."
மூன்று பேரும் ஒப்புக் கொண்டனர்: முதலாவது நபர் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.
இரண்டாவது நபர் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.
பேய் சிரித்தது.
"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான்.
நீ எதை வீசப் போகிறாய்..?"
உடனே மூன்றாவது நபர் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு
"இந்த தண்ணீரை கொண்டு வா !" என்றான்.
பேய் திகைத்தது.
ஓட்டம் பிடித்தது.
நீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டுபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்..! என்பது தான்.!

~*~

சொர்க்கம் நரகம்

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காணஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்.
மிகப் பெரிய அழகிய பாத்திரங்களில் அறுஞ்சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு,சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுஞ்சுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதேப் போல பெரிய அழகிய பாத்திரங்களில் அறுஞ்சுவைமிக்க பதார்த்தங்களும்வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.
ஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்ட முடியுமல்லவா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான்.
"ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான்.
தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்'...

~*~

Thursday 8 October 2015

திருந்திட்டான்...

மூன்று பேருக்கு 25 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது.
ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதாவது அவர்கள் கேட்கலாம்
முதல் ஆள்,”எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்” என்றான்.
இரண்டாம் ஆள், “எனக்கு சிறையில் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்”
மூன்றாவது ஆள்,”எனக்கு ஒரு லட்சம் சிகரெட்கள் வேண்டும்”
25 வருடம் கழித்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
முதல் ஆள்,” நான் நிறைய தெரிந்து கொண்டேன் ஒரு லைப்ரரி அமைப்பேன்”
இரண்டாம் ஆள்,”நான் உடலை வலுவாக்கினேன் ஜிம் வைப்பேன்”
மூன்றாம் ஆள்,”நாம் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்”என்றான
எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம் சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான் என்று.
அவன் சொன்னான், “தீப்பெட்டி கேக்க மறந்துட்டேன்ப்ப
.....!!!!!!!!!

~*~

Monday 5 October 2015

தைரிய வைத்தியம்

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த்தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.
‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.
கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.
நல்ல ஆன்மீக சிந்தனையை தூண்டும் தன்னம்பிக்கையுடன் இறை நம்பிக்கையூட்டும் அற்புதமான கதை!
பகிர்ந்தால் அனைவரும் இன்பம் அடைவார்கள்

Thursday 1 October 2015

எமலொகத்தில் நம்மாளு...

நம்ப ஊரு ஆளு ஒருத்தர் செத்து எலோகம் போறாரு..
எமனோட அங்க இருக்கிற சித்திர குப்தன், "இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம்..., நீ ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லிட்டா, உன்னை சொர்க்கத்துல ஜாலியா இருக்கிறத்துக்கு நாங்க அனுமதிப்போம்" ன்னு சொல்றாரு...
சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்ல...,
அதுக்கு சித்திர குப்தன்,
முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல முக்கியமான மூன்று நாட்கள் எது ?
இரண்டாவது கேள்வி :-
ஒரு வருசத்துக்கு எத்தினை செகன்ட்ஸ் இருக்கு..? உனக்கு ரெண்டு நிமிஷம் அவகாசம்'ன்னு சொன்னார்.
நம்ப ஆளு, இதுக்கெதுக்கு ரெண்டு நிமிசம் யோசிக்க..! நான் உடனே சொல்லுறேன்னான் ....!!
சித்திரகுப்தன் ஆச்சர்யமாயிட்டார்.!! சரி சொல்லுப்பான்னார்..
முதல் கேள்வி விடை :-
ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல முக்கியமான மூன்று நாள், "நேற்று, இன்று, நாளை"ன்னான்
இரண்டாவது கேள்வி விடை :- ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றான்.
சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு, "நம்ப ஆளிடம், யோவ்.... எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, இது வரைக்கும் இங்க வந்த யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க, சரி பரவாயில்லை, அதை கூட நாங்க எங்க ஆன்சர் புக் ல சேத்துக் கொள்கிறோம்.
ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS மட்டும் இருக்கும் - ன்னு கேக்க....
அதுக்கு அந்த நம்மூரு ஆளு..., ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECOND'S
இருக்கும் ன்னு சொன்னதுமே...,
சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரு....!!! எமனுந்தாங்க...!!!