Friday 9 October 2015

தூதன்

கடவுள் நம் 'குடி'மக்களை பார்த்து பொறாமை கொண்டு , அப்படி என்ன தான் இருக்கு இந்த , டாஸ்மார்க் கடை'லன்னு பார்த்துட்டு வர, தன்னோட கிங்கரன் ஒருத்தனை மனுச ரூபத்துல பூமிக்கு அனுப்புறார்..
அவனும் டாஸ்மார்க் வந்து உள்ளே சென்று ஆர்டர் செய்தான்,
5 பீர் முழுவதும் முடிந்தது,
ஒரு வித்தியாசமும் தெரியாததால் மேலும்
தொடர்ந்தான்,
2 ஃபுல்.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..
மீண்டும் ஆரம்பிதான் ,
2 பீர் ..
கடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல் , கேடடார் ..
"யார் யா நீ..? ஏரியாவுக்கு புதுசா தெரியுர...! இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை எறல? சரியான மொடாக் குடியனா இருப்ப போல...?
மறுபடியும் கேட்குற ?
அதற்கு அவன்
"நான் தான் கடவுளின் தூதன்..!" எனக்கு இந்த போதையெல்லாம் ஒன்றும் செய்யாது" என்றான்.
கடைகாரர் : "தோ டா ..!
அவனவன் குடிச்சாலே நான் தான் கடவுள்'ன்னு சொல்லுவான்....!!
தொரைக்கு இப்ப தான் ஏற அரம்பிச்சி இருக்கு..! அதான் புதுசா தூதன்னு சொல்லுறாரு....!
நடக்கட்டும் ..! நடக்கட்டும் ..!"

~*~

No comments:

Post a Comment