Saturday 24 July 2021

இன்றைய கல்விமுறை

ஒரு ஆராய்ச்சி மாணவன் தவளை ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

*"தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்!*.
ஒரு காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு "தாவு" என்றான். வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.
நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான்.
நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது. மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான்.

 அதனிடமிருந்து அசைவேயில்லை!
ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்-
*"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது"*
*இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.*

*மொபைல் போன்* குறைந்தது 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்கும் சாமானியன் ஒரு *பசு மாட்டுக்கு* 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்குவதில்லை!

தினமும் *20, 50, 100, 200* ரூபாய் ரீச்சார்ச், இன்டர்நெட்டுன்னு *செலவு செய்யும் சாமானியன்* தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு கிடைக்கணும்னு நினைக்கிறான் !
*நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம்* பற்றி பேசறாங்க , நமக்காக நம்ம *ஊருக்காரன்* வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பேனா கூட வாங்கறதில்ல !,
நமக்கு தெரிஞ்சதெல்லாம் *அமேசான், பிளிப்கார்ட்!* அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிறாங்க !
அரிசி போட்டவுடன் வேகணும் !

சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் !
பொடிசா இருக்கணும் !
ஆனா நோய் வரக்கூடாது ! !
பழுப்பு நிறத்துல இருக்கிற அரிசிய வெள்ளையா கேட்டா எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்?
தப்பு யார் மேல ?

கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஒட்டைகூட இருக்ககூடாது ன்னு கடைக்காரண்ட கேட்டா அவன் விளைவிக்கிறவண்ட சொல்லி…
விளைய வைக்கிறவன் பூச்சி மருந்த அடிக்க
நாமும் வாங்கி சாப்பிடறோம்…! அப்பறம் டாக்டர தேடி அலையறோம் !

நாமெல்லோருமே ஆடு மாடு மேய்ச்சவங்க வாரிசுதான்.!
என்ன கூட குறைய ஒரு சில தலைமுறைகள் இருந்திருக்கும்.
இப்போ பேண்ட் சர்ட் , KFC Chicken, Pizza, Burger அப்போல்லுனு வாழ்ந்துட்டா சந்தோசம் கிடைச்சிடுமா?

*இன்னும் ஆடு மாட வச்சு சாணிய அள்ளி உரமாக்கி எங்கே ஒரு காட்டுல நமக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு மேலானவன் என்பதை என்று உணர்வீர்களோ!*

*நல்லதை சாப்பிட நினையுங்கள்.*
*சாப்பிட கொடுத்தவரை நினையுங்கள் !*.
*வாழ்க விவசாயி !*
*வாழ்க இயற்கை விவசாயம் !*

~*~