Friday 23 June 2023

விமானிக்கு மது கொடு

மதகுரு ஒருவர் விமானமொன்றில் பயணம் செய்தார்.
விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த போது பணிப்பெண் எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார்.
அவ்வாறே பணிப்பெண் மதகுருவிடமும் மதுக் கோப்பயை நீட்டினார்.அவர் வாங்க மறுத்து விட்டார்.

அதற்கு பணிப் பெண்,”ஐயா ,எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது.ஏற்றுக் கொள்ளுங்கள் ” என்றார்.
அதற்கு மதகுரு,”அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம் ” என்றார்.

பணிப்பெண் விடுவதாய் இல்லை,
”உலகிலேயே விலை உயர்ந்த மது வகை இது.கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள் ” என்றார்.அப்போதும் மதகுரு ஏற்றுக்கொள்ளவில்லை.

பணிப் பெண் கடைசியாகச் சொன்னார்”இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காகவேனும் ஒரு துளியேனும் பருகுங்களேன்.”
அதற்கு குரு சொன்னார்,
” அம்மா , நான் ஒரு சிந்தனையாளன் மதுவெல்லாம் பருக மாட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் ஒன்று செய்யுங்கள்.
இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள்”என்றார் .

அவர் அப்படிச்சொன்னதும்தான் தாமதம் பணிப்பெண் அதிர்ந்துபோய் விட்டார்.
“ஐயோ,
பணியில் இருக்கிற விமானி எப்படி
மது அருந்த முடியும்…?
இதை,
அவர் குடித்தால் அவர் புத்தி
தடுமாறி விமானம் விபத்துக்கு உள்ளாகுமே.
உயிர்கள் பறிபோகுமே ”
என்று பதறினார்.

மதகுரு சொன்னார்,
”சகோதரி,
வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான். தகாத காரியங்களை செய்தால்
புத்தி தடுமாறி விபத்து நேரிடும். வாழ்க்கைத்தரம் என்பது மிகவும் உயர்ந்த விஷயம்.
நல்ல குணங்களுடன் இறைபக்தியுடன் வாழ்கிற வாழ்வே தரமான வாழ்வு” என்றார்.......

நாவடக்கம்

முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் பண்டிதர்..

அவரும் .. முடிவெட்ட நாலணா.. சவரம் பண்ண ஒரணா சாமி ! என்று பணிவுடன் கூறினார்..

 பண்டிதர் சிரித்தபடியே,
அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் பண்டிதர்..

வயதில் பெரியவர் என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

 வேலையை ஆரம்பித்தார் நாவிதர்..

நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு.. சற்று ஏமாற்றந்தான்..

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்..

ஏன்டாப்பா.. உன் வேலையோ..! முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம.. உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி "நாவிதன்னு" சொல்றாங்க..?

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் பண்டிதர்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை..
நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான்..! நாங்க நாவிதர்கள்..
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..?

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது..

அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. 

இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..?

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து..
 
சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க.. என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்..

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்..

எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..?

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது..

அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்..

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்..

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்..

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்..

பண்டிதரின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்..
சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..?

பண்டிதர் உடனே, ஆமாம் என்றார்..

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து..
மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க.. என்றார்

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்..

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்..

நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்..

அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார்,
சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..?

இப்போது பண்டிதர் சுதாரித்தார்..
_வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்..
இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. என்றார் பண்டிதர்..

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்..

சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்..

சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது.. என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்..

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்..

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்..

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது..

கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்..

நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் - அந்தஸ்தும் - பொருளும் - மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல..

இதை உணராதவர்கள் - இப்படித்தான் அவமானப்பட நேரும்

அன்பால்...

என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்ளவதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...

"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போது!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்... 

மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது... இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது... 

இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை... பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது... மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள்... 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது... 31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது, இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள்... நேராக மகானை சந்திக்க வந்தாள், புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்...

"பார்த்தீர்களா குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்... 

"ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய், உன் கணவர் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர்!" என்றார்.....

புண்ணிய கணக்கு

தென்காசி ரயில் நிலையத்தை விட்டு சுமைகளுடன் வெளியே வந்தேன் ஆழ்வார்குறிச்சிக்கு ஆட்டோ பேசினேன் 

ஆட்டோக்காரனிடம்
' எவ்வளவு..? என்று கேட்டேன் ...

''600-ரூபாய்'' என்றான்...

''400-ரூபாய்க்கு வருமா ???என்றேன்,..

சற்று யோசித்த அவன் 
'சரி 450-ரூபாய் கொடுங்க... வண்டி ஏறுங்க சார்'' என்றான்.

 ஆட்டோ பறந்தது... 

''ஏம்பா இந்த வழியா சவாரி போனா நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...? என்றேன்... 

ரோட்டுக்கடை தான் சார் என்றார் 

''அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்ங்க . இருவரும்
டிபன் சாப்பிட்டு விட்டு போவோம்'' என்றேன்...

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது..

ஒரு நடுத்தரவயது அம்மா..
அவர்கள் கணவர் துணையற்றவர் என சொல்லியது தோற்றம்..
 
''வாங்க சார்'' என்றார்

""இங்கதான் சார்.......வயித்துக்கு ஒன்னும் பண்ணாது'' என்றார் ....ஆட்டோ டிரைவர்

இட்லி... வடை... பொங்கல்... பூரி... என கட்டினோம்..

''எவ்ளோம்மா?'' என்றேன்.

''60-ரூபாய் சார்'' என்றார்  

100-ரூபாய் கொடுத்தேன்...

மீதியை.., சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா...

''இன்னக்கி வியாபாரம் டல் சார்'' அதன் சில்லரை கஷ்டம் என்றார்...

''சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்...அப்போ வாங்கிக்கிறேன்''
என்று கூறி புறப்பட்டோம்...

''சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு போறீங்க.... நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு,40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?'' என்றார் ஆட்டோக்காரர்

''அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும். அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய்கொடுத்திருப்போம்... இல்லையா....?

':எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் அண்ணா'' என்றேன்.

சங்கம் அமைப்பது.. வசூல்செய்வது... அதன்மூலம் பொதுசேவை செய்வது.. 
புண்ணிய தலங்கள் செல்வது, 
நன்கொடை கொடுப்பது.. உண்டியல் போடுவது என *இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்"என்றேன்..*

ஆட்டோ வீடு வந்து சேந்ததது..

''இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட 450-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்..

*'400-ரூபாய் போதும்'' சார் என்றார்....!*

''என்னாச்சு அண்ணா? என்றேன்...

*''அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும் புண்ணியம் கிடைக்குமே சார்''* என்றார் ...!

ஒருகணம் மூச்சு நின்றது

*நான் போடும் புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் புண்ணிய கணக்கு...!*

Sunday 18 June 2023

பசுவும் பழக்கடைகாரரும்

தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர் 

அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது. அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். அடிக்காதிங்க அடிக்காதிங்க என்று கத்தினார்.

என்ன ஐயா உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாபிடுது நீங்க என்னடானா அடிக்க வேண்டாம்னு சொல்லுரிங்க? என்று கேட்டார்.

அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாபிடுறோம்.. நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு.

அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகலையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும் என்றார் அவர்.

என்ன அய்யா இப்படி சொல்லுரிங்க... அந்த பசு இப்படி சாப்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு கேட்டேன். அதற்க்கு அவர் தந்த பதில் என்னை கலந்கடித்தது.

அந்த பெரியவர் சொன்னார் என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது? நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைகிறீங்க.. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுதிர போகுது...?

எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்துவைகல எங்க ஆத்தாக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன் என்றார்.

படித்ததில் பிடித்தது.....

Saturday 17 June 2023

RULES TO TEACH YOUR KID

1. Never shake a man’s hand sitting down.
2. Don’t enter a pool by the stairs.
3. The man at the BBQ Grill is the closest thing to a king.
4. In a negotiation, never make the first offer.
5. Request the late check-out.
6. When entrusted with a secret, keep it.
7. Hold your heroes to a higher standard.
8. Return a borrowed car with a full tank of gas.
9. Play with passion or don’t play at all…
10. When shaking hands, grip firmly and look them in the eye.
11. Don’t let a wishbone grow where a backbone should be.
12. If you need music on the beach, you’re missing the point.
13. Carry two handkerchiefs. The one in your back pocket is for you. The one in your breast pocket is for her.
14. You marry the girl, you marry her family.
15. Be like a duck. Remain calm on the surface and paddle like crazy underneath.
16. Experience the serenity of traveling alone.
17. Never be afraid to ask out the best looking girl in the room.
18. Never turn down a breath mint.
19. A sport coat is worth 1000 words.
20. Try writing your own eulogy. Never stop revising.
21. Thank a veteran. Then make it up to him.
22. Eat lunch with the new kid.
23. After writing an angry email, read it carefully. Then delete it.
24. Ask your mom to play. She won’t let you win.
25. Manners maketh the man.
26. Give credit. Take the blame.
27. Stand up to Bullies. Protect those bullied.
28. Write down your dreams.
29. Take time to snuggle your pets, they love you so much and are always happy to see you.
30. Be confident and humble at the same time.
31. If ever in doubt, remember whose son you are and REFUSE to just be ordinary!
32. In all things lead by example not explanation.
33. Dress how you want to be addressed
34. BE BLESSED BY BEING A BLESSING