Tuesday 27 February 2024

மூன்று விசித்திரமான மனிதர்கள்

ஒரு மதிப்புமிக்க பாடம் கொண்ட கதை.(தவற விடாதீர்கள்)

ஒரு ஏழை மற்றும் பரிதாபகரமான மனிதன் தான் அனுபவித்த அனைத்து கஷ்டங்களால் சோர்வடைந்தான். அவனுக்கு வேலை கிடைக்கவில்லை, குடும்பத்திற்கு உணவு கொடுக்க முடியவில்லை. அவன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு வேறு எங்காவது தூர தேசம் செல்ல முடிவு செய்தான், தான் விரும்பும் ஒரு வெற்றியாளராக மாற விரும்பினான்.

ஒரு நாள் காலையில், எழுந்து தனது நீண்ட பயணத்திற்கு தயாராகி கிளம்பினான். இரவும் பகலும் பல நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்தான். சிறிது நாள் கழித்து, அவன் ஒரு ஆற்றின் அருகே மூன்று விசித்திரமான மனிதர்களைக் கண்டான்.

திடீரென்று, முதல் விசித்திரமான மனிதர் அவரிடம் கேட்டார்:
"நீங்கள் வெகு தூரம் வந்துவிட்டதாகத் தெரிகிறது. எங்கே செல்கிறீர்கள்?"

அந்த மனிதன் பதிலளித்தான்,
"எனது வாழ்க்கை எந்த வெற்றியும் இல்லாமல், சாதனை இல்லாமல் இருந்தது. கடந்த காலங்களில் நான் பலமுறை தோல்வியடைந்துள்ளேன். நான் விரும்பும் வாழ்க்கையை அடைய, அதற்கான இடம் தேடி பயணிக்கிறேன்."

இரண்டாவது விசித்திரமான மனிதர் சொன்னார்.
"நீங்கள் எங்களை உன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும், இல்லையெனில் உனது கனவுகளை நீங்கள் அடைய முடியாது."

ஆச்சர்யமும் ஆர்வமும் நிறைந்த அந்த மனிதன் கேட்டான்.
"நீங்கள் அனைவரும் யார்?"

மூன்றாவது விசித்திரமான மனிதர் பதிலளித்தார்,
"என் பெயர் Tesdnim, மற்றும் அவர்கள் பெயர்கள் முறையே, Sucof மற்றும் Ycnetsisnoc. நீ வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் உனக்கு நாங்கள் மூவரும் தேவை."

அந்த மனிதன் சிறிது நேரம் யோசித்தான், பின்னர் மூன்று விசித்திரமான மனிதர்கள் தன்னுடன் வரலாம் என்று ஒப்புக்கொண்டார். அவன் அந்த மூவரையும் மிகவும் நம்பினான். வேறு ஒரு சிறிய நகரத்திற்கு பயணம் செய்த அவர்கள், ஒரு தனியான வீட்டைக் கண்டார்கள், அங்கு வாழ முடிவு செய்தனர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏழையின் வாழ்க்கை மிகப்பெரிய வெற்றியாக மாறியது. அவன் வாழ்க்கையில் தனது கனவுகளை அடைந்தான். அவனுக்கு வேலை கிடைத்தது, பதவி உயர்வு கிடைத்தது, பணக்காரன் ஆனான், ஒரு மாளிகையைக் கட்டி தனது முழு குடும்பத்தையும் அங்கு வாழ வைத்தான்.

ஒரு நாள், அவன் மூன்று விசித்திரமான மனிதர்களை பார்த்து அவர்களிடம் கேட்டான்:

"சொல்லுங்கள் , உண்மையில் நீங்கள் யார்?"

அவர்களில் ஒருவர் புன்னகையுடன் பதிலளித்தார்,

"எங்கள் பெயர்களை நாங்கள் ஏற்கனவே உனக்குச் சொல்லிவிட்டோம். 
எங்கள் பெயரில் நாங்கள் யார் என்ற க்ளூ (துப்பு)உள்ளது.
எங்கள் பெயர்களை சரியாக கண்டுபிடித்தால், இவ்வளவு பெரிய பெரிய வெற்றி எப்படி வந்தது என்று உனக்கு புரியும்" 

"நாங்கள்தான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள இடைவெளி. யாரேனும் தங்கள் கனவுகளை அடைய வேண்டும் என்றால், நீங்கள் எப்படி எங்களை உங்களோடு கூட்டி சென்றீர்களோ, அதே போல் அவர்களும் எங்களை அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் நினைத்ததை அடைவார்கள்"

நண்பர்களே.. இப்போது உங்களுக்கான சவால்.

அந்த மூன்று பேரும் யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் கமெண்ட்டில் பதிவிடுங்கள்..

#ajaykumarperiyasamy #tamilmotivation #mindshiftmaestro