Saturday 24 April 2021

கோபத்தை துறந்த துறவி

குருவின் பாடம்

யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாதவர் அந்த துறவி. அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார். பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை! எப்படி இவரால் இருக்க முடிகிறது? என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் அவரின் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம். தன் கேள்வியை துறவியிடமே கேட்டு விட்டார். துறவி அவரிடம் பொறுமையாக தான் யாரிடமும் கோபமே படாத ரகசியத்தை விளக்கினார். "ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் நெடுநாள் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு." என் தியானம் கலைந்தது. 'இப்படி அஜாக்கிரதையாக படகை முட்டவிட்டது யார்?' என்று கோபமாகக் கண்களைத்

திறந்து பார்த்தால்,அது ஒரு வெற்றுப்படகு! காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் தியானம் செய்த படகு மீதி மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்தப் படகிடம் காட்டி எதுவும் பிரயோஜனம் உண்டோ சீடனே? யாராவது என்னைக் கோபப்படுத்தும் போது எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். இதுவும் ”வெற்றுப் படகு தான்” என்று அமைதியாகி விடுவேன்" என்றார். கோபத்தின் பாதிப்பை நாம் 3வகைகளாக பிரிக்கலாம்: 

1) கோபம் அறிவை பாதிக்கக் கூடியது, 
2) கோபம் உடலை பாதிக்கக் கூடியது, 
3) கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது. 

புரிந்ததா ரகசியம் என்றார் குரு! குரு கோபப் படாததின் ரகசியம் கேட்ட சிஷ்யர் தெளிவு பெற்றார்.

நீதி:

உண்மையான பலசாலி யார் என்றால், தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. 

Wednesday 14 April 2021

பூர்வஜன்மம்


ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு, தனது மகளிடம் சொன்னார்.

"கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு  சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக்கொண்டு  கடைக்கு கிளம்பினார்.

அவர் திரும்பி வந்தபோது, ​​
அவள் காரில் இல்லை. திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, ​​200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

நிம்மதி பெருமூச்சுடன் 
ஓடிச் சென்று 
அவள் முன்னால் நின்றார்.
" என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்.

"என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு  நினைக்கிறேன். போன ஜென்மத்துல  நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன்.இதப்பத்தி எனக்கு தெரியணும்...நிறைய தெரியணும் " என கத்த ஆரம்பித்தாள்.

அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் திகைப்புடன் முன்னேறிக் கொண்டிருந்தாள்.

" கொஞ்சம்..நில்லுமா" என கெஞ்சினார்.

ஆனால், அவள், அப்பா சொல்வதைக் கேட்காமல்..அந்த கட்டிடத்தை நோக்கி சென்றாள்.

"அதுக்கும் எனக்கும்  என்ன சம்பந்தம்னு தெரியறவரைக்கும்  நான் ஓயமாட்டேன்பா".
 
பொறுமையிழந்த 
அப்பா பளாரென்று மகளின் கன்னத்தில் அறை ஒன்றை விட்டார். கதிகலங்கி போய் நின்ற மகளிடம் சொன்னார்.

"இந்த லீவுல அம்மாவோடவும் பாட்டியோடவும்  சீரியல்ஸ் பாத்து உன் மூளை எப்படி ...இப்டி மழுங்கிப் போச்சு. Covid க்கு முன்னாடி நீ படிச்ச ஸ்கூல்டி...இது."
🤣😂🤣😂🤣😂

Monday 12 April 2021

ஓட்டைப் பானை

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

The Cracked Potஇரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.

Sunday 11 April 2021

அழுக்கு

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
*அழுக்கு*  சிறுகதை. 
🥢🥢🥢🥢🥢🥢🥢🥢🥢🥢

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை தேனீர் குடித்தபடி ஜ  ன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான். 

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. 

தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...???

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!!! என்றாள்

கணவன் அமைதியாகச் சொன்னான்,

*“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”*

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன. 

*நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.*

*ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.*

*ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...??....!!!*

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்......???

*வீரம்* என்பது 
பயப்படாத மாதிரி 
நடிப்பது;

*புத்திசாலித்தனம்* என்பது 
அடுத்தவனை 
முட்டாளாக்குவது; 

*அமைதி* எனப்படுவது 
அடுத்து என்ன பேசனும்னு 
தெரியாமலிருப்பது; 

*குற்றம்* என்பது 
அடுத்தவர் செய்யும்போது மட்டும்
தெரிவது; 

*தானம்* என்பது 
வீட்டில் உள்ள 
பழையதை கொடுப்பது; 

*பணிவு* என்பது 
மரியாதை இருப்பதுபோல் 
நடிப்பது;

*நேர்மை* என்பது 
நூறை திருப்பிக் கொடுத்து 
இருநூறாய் கேட்பது; 

*நல்லவன்* என்பது 
கஷ்டப்பட்டு 
நடிப்பது; 

*எதார்த்தம்* என்பது 
நெல்லை விற்றுவிட்டு 
அரிசி வாங்கிக்கொள்வது; 

*மனிதம்* என்பது 
இன்னமும் கண்டுபிடிக்க 
முடியாதது...!!

பாத்திரம் அறிந்து பிச்சை போடு

#வரம்_ஆன்மீககதை
 
அடர்ந்த கானகத்தின் நடுவில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர்
தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு துணை. அது ஒரு நாய்!
-
முனிவர் பக்கத்திலேயே அது இருக்கும். அவர் தவம் செய்யும்
போது அவர் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். முனிவர்
சாப்பிட்டு மிச்சம் வைக்கும் பழ, காய்களையே அதுவும் தின்றது.
அசைவத்தின் பக்கம் போகக்கூட இல்லை.
-
ஒரு நாள், பயங்கரமான சிறுத்தை ஒன்று, அந்த நாயை வேட்டையாடத்
துரத்தியது. நடுங்கிப் போன நாய், முனிவரின் கால்களில் விழுந்து
கதறியது.
-
கவலைப்படாதே. நீ என குழந்தை மாதிரி. நான் உன்னைக்
காப்பாற்றுகிறேன். இந்த விநாடியே நான் என் மந்திர சக்தியால்
உன்னையும் ஒரு சிறுத்தையாக, அந்த சிறுத்தையை விட பலம்
மிகுந்த சிறுத்தையாக மாற்றி விடுகிறேன்’ என்றபடி கண்களை மூடி
மந்திரத்தை உச்சரித்தார்.
-
அடுத்த விநாடி, அந்த நாய், சிறுத்தையாக மாறிற்று. துரத்தி வந்த
சிறுத்தை, துண்டைக் காணோம், நாயைக் காணோம் என்று ஓடிற்று.
ஒரு வாரம் ஆயிற்று. ஒரு பெரிய புலி அந்த பக்கம் வந்தது.
ஆசிரமத்தில் இருந்த சிறுத்தையைப் பார்த்துப் பசியுடன் துரத்தியது.
வழக்கம் போல் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் இப்போது
சிறுத்தையைப் புலியாக மாற்றினார். அப்புறம் என்ன? இந்தப் புலியைக்
கண்டதும், வந்த புலி ஓடிப் போயிற்று.
-
உருமாற்றம் அடைந்த புலியோ இப்போது பழம், காய்களை
சீண்டுவதில்லை. மெதுவாக முயலில் ஆரம்பித்து மான், பன்றி என்று
ரகசியமாக வேட்டையாட ஆரம்பித்தது.
அப்புறம் மதம் கொண்ட யானை ஒன்று புலியைப் பந்தாட வர,
நம் புலி, முனிவர் தயவில் யானையாக மாறி சேறு, ஆறு என்று ஜாலியாக
அலைந்து ஆசிரமம் பக்கம் கூட எப்போதாவதுதான் வந்தது.
-
கொஞ்ச நாள் கழித்து பெரிய சிங்கம் ஒன்று யானையைக் கொல்ல
விரைந்து வந்தது. இப்போதும் முனிவர் அருளால் யானை சிங்கமாக
மாறியது.
-
அத்துடன் அதற்குப் பிரச்னை ஓய்ந்ததா என்றால் அது தான் இல்லை.
அடுத்த வாரமே மிகுந்த வல்லமை கொண்டதும், எட்டுக் கால்களை
உடையதும், எல்லா மிருகங்களை வேட்டையாடக் கூடியதுமான சரபம்
என்னும் மிருகம் அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைக் காலி செய்யத் துரத்தியது.
-
இப்போதுதான் சிங்கத்துக்கு முனிவரின் நினைவு வந்தது. காப்பாற்றுங்கள்,
காப்பாற்றுங்கள் என்று ஓடிப் போய்க் கெஞ்சியது.. வழக்கம் போல் முனிவர்,
அதை சரபமாக மாற்றினார்.
-
சரபமாக மாறிய நாய், காட்டையே கலக்க கலக்க ஆரம்பித்தது. கண்ணில்
பட்ட மிருகங்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கொன்றது. தின்றது. காட்டு
உயிரினங்கள் எல்லாம் ஓடி ஓளிந்தன. தவித்தன. பயந்தன. மிரண்டன.
-
இப்போதும் ஆபத்து வந்தது. சரபத்துக்கு அல்ல, முனிவருக்கு.
ஆம். தனக்கு வரம் தந்த முனிவரையே கொன்று விட விரும்பியது சரபம்.
-
ஏன்?
-
காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு நடுங்குகின்றன.
பயந்து ஓடுகின்றன. என்னிடம் அஞ்சும் மிருகங்கள், அந்த முனிவரைச்
சரணடைந்தால் அவரும் பழக்க தோஷத்தில் எல்லா மிருகங்களையும்
சரபமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது? எனவே அந்த முனிவரைப்
போட்டுத் தள்ளிவிட்டால் நான் மட்டுமே சரபமாக இருப்பேன் என்று
கொக்கரித்த சரபம், முனிவரைக் கொல்ல நெருங்கியது.
-
எல்லாம் வல்ல முனிவருக்கு இந்த நாயின், சரபத்தின் எண்ண ஓட்டம்
தெரியாதா என்ன? வந்ததே கோபம் அவருக்கு. ஓடி வந்த சரபத்தைப்
பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.
-
அவ்வளவுதான், அடுத்த விநாடியே அந்த சரபம், பழையபடி நாயாக,
சோதா நாயாக மாறிற்று.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

பாத்திரம் அறிந்து பிச்சை போடு!!!

Monday 5 April 2021

நிலக்கரி - கர்மவீரர்

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். பதிலில்லை.

முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.
ஒன்றும் நடக்கவில்லை.
காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.

மிக விரிவான விஞ்ஞான பூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார்.

காகிதங்களைப் புரட்டிய நேரு கையை விரித்தார் ..

" இதெல்லாம் சாத்தியமில்லை..!"

"ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன.

ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.."

கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளி நேருவை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி காமராஜர்.

காமராஜருக்கு கை சுத்தம் ..! அதனால் பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..

( உள்துறை செயலாளரைப் பார்த்து நடுங்குகிறவர்கள், ஊழல் செய்து மாட்டிக் கொண்டு கைகால் பிடித்துவிடும் அரசியல் தலைகளுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை )

அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார் காமராசர்.

"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..."

"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி ..
எங்களால் எப்படி....?"

" நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..." என்கின்றார் பிரதமர்.

முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். என்ன ஒரு மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம்.

1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன.

அடுத்த வருடம் 50 கோடி.

1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார்.

பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய ஊழல் பெருச்சாளிகளின் கவலையல்ல.

மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...!

சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்....

முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார்.

அதோ..

நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர்.

ஓடினார் முதல்வர்....

தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ?

தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார்.

வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது.

இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...!

இந்த பதிவை படித்த போது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன.

இப்படியும் ஒரு மனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை ! இனி பிறக்கபோவதுமில்லை !
ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை.

படித்த பதிவு.

Friday 2 April 2021

மை

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.

“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட*மையை* 
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
சிலர் *தற்பெரு“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
சிலரோ
*பொறா“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள். 
வேறு சிலரோ
*பழ“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை.
இவற்றையெல்லாம்
*அரு“மை“*யான
எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில
*“மை“கள்* 
உள்ளன.
இவை என்ன தெரியுமா? 
*கய“மை“*, 
*பொய்“மை“*, 
*மட“மை“*, 
*வேற்று“மை“* ஆகியவைதாம்.
கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.

“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய
*“மைகள்“*
என்னென்ன தெரியுமா?
*நன்“மை“* தரக்கூடிய
*நேர்“மை“*, 
*புது“மை“*, 
*செம்“மை“*, 
*உண்“மை“*.

இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது 
எவைத் தெரியுமா? 

*வறு“மை“*, 
*ஏழ்“மை“*, 
*கல்லா“மை“*,
*அறியா“மை“*
ஆகியவையே. 

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்
*கட“மை“* யாகவும்,
*உரி“மை“ யாகவும்*
கொண்டு சமூகத்திற்குப்
*பெரு“மை“*
சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.

கூட்டத்தில் உற்சாக ஒலி விண்ணைப் பிளந்தன.
படித்ததில்
பிடித்ததைப் பகிர்ந்தேன்.
இந்த அரு *மை* யான 
நல்ல *மை* விசயத்தை உங்கள் நட்பு வட்டாரத்திற்கு பரப்பலாமே !!!

படித்ததில் பிடித்தது.

Thursday 1 April 2021

பிச்சைகார இராஜா

*தேர்தல் நேரத்தில்
சிரிச்சிட்டு சிந்திங்க*

*ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்ச்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.*

*அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"*  *ன்னு சொன்னார்.*

*மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.* 

*ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு.  வாந்தி வருதான்னு  பாக்கலாம்.* 
*வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.*

*ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.*
*அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிக்கும் ன்னு.*

*ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.*

*ராஜா குருடனை  பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.?  எப்படி சரியா தீர்வு சொன்னாய்.?  குருடன் சொன்னான். ராஜா..!!  இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி.  அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய குடுத்தா இறைவன் பக்கத்துலயே  ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.*

 *ராஜாவுக்கு சந்தோஷம்.*
*இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.*

 *கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான்.  ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.*

*இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம்.  மந்திரிய கூப்பிட்டார்.*

*ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...*
*வைரத்தை  முழுங்கித்தொலைக்க  சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு  தெரியாதுன்னு ட்டார்.*

*ராஜா சொன்னார்.  மந்திரி.!!  போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா.  அவன்தான் காரண காரிய தோட கரெக்டா சொல்லுவான்.*

*மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார்.  டேய் இது ஒரிஜினல் வைரமா.?  போலி வைரமா.?  இல்லன்னா ரெண்டும் கலந்து  இருக்கா ன்னு பார்த்து சொல்லு.*

*அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை  கையில எடுத்து பிரிச்சு....  ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி ன்னு பிரிச்சு கொடுத்துட்டான்.*

 *வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.*

*ராஜாவுக்கு ஆச்சர்யம்.*
*எப்படிப்பா  கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?*

 *குருடன் சொன்னான்.*
 *ராஜா.!!  வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம் ன்னும் பிரிச்சேன்.*

 *ராஜா சந்தோஷமா பாக்கெட் ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன  குடுத்து பட்டை  சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு ன்னு சொல்லி அனுப்பி வச்சார்.*

*இப்படியே  கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.*
*யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட  கேட்கிறார். எல்லா பொண்ணுமே  நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி  சொல்றார்.*

 *ராஜா பார்த்தார்.*
 *கூப்புடுங்கடா  அந்த கபோதிய.*
 *குருடன் வந்தான்.*
 *ராஜா குருடன் கிட்ட சொன்னார்.  என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன்.  எந்த ராஜா வோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.*

*குருடன் சொன்னான்.*
 *ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட  பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா  பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.*

 *ராஜாவுக்கு ஒரே குஷி.*
*சபாஷ்.!! இந்தா  டோக்கன்.  அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.*

 *குருடனும் போய்ட்டான்.*

*கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு  வர சொன்னார்.*

*டேய்.!!*
*நான் ஒன்னு  கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.  அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல  எல்லோரும் என்னைய பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.?  சரியா சொல்லனும் என்றார்.*

 *குருடன் அமைதியா இருந்தான்.*
 *பதிலே பேசல.*

*ராஜா திரும்ப கேட்டார்.*

*குருடன் அமைதியா  சொன்னான்.*

 *ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.*

 *நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம்  அப்படின்னான்.*

 *ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.*

*ராஜா...*
*முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு  இலவச டோக்கன்.*

 *நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.*

 *அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா  இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.*
 *ஆனா நீங்க குடுத்தது பட்டை  சாத டோக்கன்.*

 *மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன்.  உண்மையான  ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி  குடுத்து இருப்பார்.*
 *நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை  சாத டோக்கன்.*

*ஆக....  சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விசயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?*  
*நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.?  ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும்  முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.*
*மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.*

*அந்த குருடனிடம் இருந்த மதிநுட்பம்  தேவையான நிலைமைல தான் இப்ப நாம இருக்கோம்.*

*தெளிவான முடிவெடுத்து அனைவரும் முதலில் தவறாது வாக்களிப்போம்* ..
😎👍