Friday 9 October 2015

புத்தி



அது ஒரு பயங்கரமான கார் ஆக்ஸிடெண்ட் இரண்டு கார்கள் மோதி, கார்களில் இருந்த ஒரு வாலிபனும் ஒர் வாலிப பெண்ணும், எந்த ஒரு பெரிய காயங்கள் இன்றி காரில் இருந்து தப்பி, கஷ்டப்பட்டு தவழ்ந்து வெளியே வந்தனர்.
கார்களுக்குகோ பயங்கர சேதாரம் ஆனால் அவர்களுக்கோ ஓன்றும் பெரிய அடி காயங்கள் ஏதும் இல்லை பெறும் வியப்பு கலந்த சந்தோஷம் இருவருக்கும்.
அந்த வாலிபனிடம் பெண் சொன்னாள் பாருங்க நம்ம கார்கள் எந்த அளவுக்கு அடையாளம் தெரியாமல் நொறுங்கி போகிறுக்கிறது ஆனால் என்ன ஆச்சிரியம் பாருங்க நமக்கு ஒன்னும் ஆகவில்லை.
நான் நினக்கிறேன் இது நமக்கு கடவுளின் வழிகாட்டுதல், ஆசிர்வாதம். எனவே நாம் நல்ல நண்பர்களாக முடிந்தால் வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம். நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்று கேட்டாள்.
அதற்கு அவன் பதில் சொன்னான். நான் நீங்கள் சொல்வதை 100% ஒத்துக் கொள்கிறேன். இது கடவுளிடம் வந்த சிக்னல் தான் என்று ஒத்துக் கொண்டான்.
தன் காரை சுற்றி பார்த்த பெண் அதில் இருந்த அவள் ஷாப்பிங் பேக்கை வெளியே இழுத்து பார்த்தாள் அதில் இருந்த வைன் பாட்டில் உடையாமல் இருந்ததை பார்த்து சந்தோஷம் கொண்ட அவள், அவனை பார்த்து சொன்னாள். இங்க பாருங்க மீண்டும் என்ன அதிசயம் காரோ இந்த அளவு டேமேஜ் ஆகி இருக்கிறது ஆனால் இந்த வைன் பாட்டில் சிறிது கூட உடையாமல் இருக்கிறது . இதுவும் கடவுளின் ஒரு சைன் தான் நமக்கு.
நாம் உயிர் பிழைத்து எதிர்காலத்தில் நாம் நல்ல படியாக சேர்ந்து வாழ வேண்டும் என்று அதை நாம் இன்று கொண்டாட கடவுள்தான் இதை உடைக்காமல் வைத்துள்ளார்.
இந்தாங்க முதலில் இதை நீங்கள் திறந்து உங்களுக்கு வேண்டிய அளவு குடித்து விட்டு சிறிய அளவில் எனக்கு தாருங்கள் என்றாள்.
நம்ம ஹீரோவும் அதை ஆமோதித்து விட்டு தாகம் வேற எடுத்ததால் முக்கால் பாட்டிலையும் காலி செய்துவிட்டு மீதியை அவளிடம் கொடுத்து குடிக்க சொன்னான்.
அதற்கு அந்த பெண் அமைதியாக பாட்டிலை வாங்க மறுத்தாள். ஏன் உனக்கு கொஞ்சம் கூட வேண்டாமா என்று கேட்டான்.
இல்லை போலீஸ் வந்து இந்த ஆக்ஸிடெண்டை விசாரித்து விட்டு போகும் வரை குடிக்க வேண்டாம் அது வரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று வெகு ஸ்மார்ட்டாக பதில் சொன்னாள்.

~*~

No comments:

Post a Comment