Monday 24 August 2015

2 ஆப்பிள்

ஒரு அழகிய குட்டி பெண் தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள்கள் வைத்திருந்தாள் .

அவளது அம்மா உள்ளே வந்து ஒரு புன்னகையுடன் குட்டிப் பெண்னை கேட்டார்: "என் செல்லம் , நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இரண்டு ஆப்பிள்களில் ஒன்றை கொடுக்க முடியுமா ?"

சில விநாடிகள் தனது அம்மாவை பார்த்துவிட்டு
திடீரென்று குட்டி பெண் ஒரு கையில் உள்ள ஆப்பிளை ஒரு விரைவான கடி கடித்து, மற்றும் ,அடுத்த கையில் உள்ள ஆப்பிளையும் ஒரு கடி கடித்து விட்டாள் .....

அவளின் முகத்தில் இருந்த புன்னகை மாறுவதை .அம்மாவால் உணரவே முடிந்தது ......ஆனாலும் ஏமாற்றத்தை காட்டவில்லை .

அப்பொழுது, சிறு பெண் தனது அம்மாவிடம் கடித்த ஆப்பிள் ஒன்றை நீட்டி சொன்னாள் " இந்தாங்க ...இது தான் மிகவும் சுவையா இருக்கு " ......

நீங்கள் யாராக இருந்தாலும் ,
எவ்வளவு அனுபவ சாலியாக இருந்தாலும் ,
எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும்,
முடிவுகளை சற்றே தள்ளி ........

மற்றவர்கள் தங்கள் கருத்தை விவரிக்க வாய்ப்பு கொடுங்கள் ..
நீங்கள் பார்ப்பது என்றுமே உண்மையாகாது ....

~*~

No comments:

Post a Comment