Monday 3 August 2015

அறிவு...

அறிவின் அறியாமை...!!
ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார்.
சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் “யானை!”, “யானை!” என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார்.
அங்கும் அதே கேள்வியை கேட்டார். ஒரே ஒரு சின்ன குழந்தையை தவிர அனைவரும் யானை என்றனர்.
உடனே ஆசிரியர் ஆகா இந்த குழந்தைக்கு யானையை கூட தெரியவில்லையே...???
நாம் எப்படியாவது இன்று யானையை புரியவைத்து விட வேண்டும் என்று யானையை பற்றி சுமார் பத்துநிமிடம் விளக்கி கூறி விட்டு, இப்போது சொல் இது என்ன .? என்று கேட்டார். அந்த குழந்தை மிக நம்பிக்கையுடன் எழுந்து,
“ஐயா, அது யானை அல்ல.?
யானையைப் பற்றி எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும் என்றது..!!
ஆசிரியர் இப்போது மிகவும் அகங்காரத்துடன் பிறகு இது என்ன என்று கேட்டார்.
அந்த குழந்தையோ அழகான புன்னகையுடன் அழுத்தம் திருத்தமாக சொன்னது....?
"ஐய்யா இது யானையல்ல"
"யானையின் படம்”....!!!
ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது!
உண்மை தானே....!!!
ஒரு சின்ன குழந்தையின்
பிஞ்சு மூளையில் உதித்த அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமை ஆக்கியது.
தமது அறியாமையை உணர்ந்த ஆசிரியர் அகங்காரம் குறைந்து அந்த குழந்தையை பாராட்டிவிட்டு சென்றார்.
“படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது!
இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது”.
ஆகையால் நாம் இந்த‌ துன்ப‌த்திற்கு ஆளாகாம‌ல் அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்!

~*~

No comments:

Post a Comment