Monday 15 February 2021

துயரம் - ஓஷோ

ஒரு ஸென் குருவிடம் சீடர் ஒரு கேள்வி கேட்டார்.

"நாம் ஏன் இவ்வளவு துயரப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்?"  <3 

அவர் "அதோ அந்த சைப்ரஸ் மரத்தைப் பார்.!"என்றார்.

கேட்டவர் காட்டிய மரத்தைப் பார்த்தார்."எனக்கு ஒன்றும் புரியவில்லையே.!"

"மறுபடி பார்.! அந்த மரத்திற்கு அருகே ஒரு ரோஜாச் செடி இருக்கிறது.
அந்த ரோஜாச் செடி நான் ஏன் குட்டையாக  இருக்கிறேன்  என்று எப்போதும் புகாரிட்டதில்லை."

"அந்த சைப்ரஸ் மரமும் ரோஜாக்களை பார்த்து  நான் மிக உயரமாக வளர்ந்தும் ஏன் என்னிடம் ரோஜாப் பூ மலர்வதில்லை என்று கேட்பதில்லை.

.காலை நேரத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன்.இரவு நேரத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன்.ரோஜாச் செடியோ சைப்ரஸ் மரமோ வருந்தி அழுவதை நான் கேட்டதில்லை."

இரண்டும் தாம் எப்படி இருக்கின்றனவோ அதில் திருப்தியோடு இருக்க அங்கே ஆழ்ந்த அமைதிதான் இருக்கிறது.

ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை. உயர்ந்தது எது தாழ்ந்தது எது என்ற விசாரணை    இருப்பதில்லை."

ஒப்பிடாத வரையில் வாழ்வில்  பிரச்சினையில்லை. ஒப்பிடாத போது வாழ்வு மிகவும் அழகானது .

*--ஓஷோ--*

No comments:

Post a Comment