Saturday 13 February 2021

பிரபஞ்சம்

நீங்கள் எப்போதாவது மரத்திற்கு வணக்கம் சொல்லியிருக்கிறீர்களா ?

 சொல்லித்தான் பாருங்களேன் !  

ஒரு நாள் ஆச்சரியப்படுவீர்கள். மரமும் ஒரு நாள் தன் நாவில், தனது மொழியில் உங்களுக்குத் திருப்பிச் சொல்லும் !

ஒரு மரத்தைக் கட்டி அணைத்துப் பாருங்கள். 

கைகள் இல்லா விட்டாலும் கூட , 

அதுவும் உங்களைத் திருப்பி அணைப்பதை ஒரு நாள் நீங்கள் உணர்வீர்கள். 

மகிழ்ச்சியை , வருத்தத்தை, சினத்தை ,அச்சத்தை தன் வழியில் அது உணர்த்தவே செய்கிறது .

இந்த பிரபஞ்சமே உணர்வு மிக்கது.

 "பிரபஞ்சமே கடவுள்" என்று நான் குறிப்பிடுவது இதைத்தான்.

சத்தியம், நீ முதலில் நட்பாக இரு. 

 மற்றவர் நட்புச் செலுத்துகிறாரா . இல்லையா என்று கவலைப்படாதே . 

அது ஒரு வியாபார ரீதியான கேள்வி. 

 ஏன் கவலைப்படுகிறாய் ? 

இந்த இயற்கை முழுவதையுமே உனக்கு நட்புடையதாக ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது ? 

ஏன் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை இழந்து விட வேண்டும்?

*🍃ஓஷோ🍃*

No comments:

Post a Comment