Wednesday 17 February 2021

விடுதலை - ஓஷோ

🏀 விடுதலை 🏀
            இந்தியாவில் வாழ்ந்த ஷாஜகான் என்ற பேரரசர் ஒரு அழகான பெண்னை விரும்பினார் .. ஆனால் அந்த பெண்ணோ அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை .. 
           அவர் ஒரு பெருந்தன்மைக்காரர் ..அதனால் அவர் அவளை சம்மதிக்கவைக்க முயன்றார்..ஆனால் அவரால் முடியவில்லை ..
            ஆனால் அவளோ அவரது மெய்க்காப்பாளர் ஒருவரிடம் காதல் வயப்பட்டு இருந்தாள் ..இதைக் கண்டு கொண்ட அவர் மிகவும் கோபம் அடைந்தார் .. அவர்கள் இருவரும் உடனடியாக பிடிக்கப் பட்டு அரச சபைக்கு கொண்டு வரப்பட்டனர் ..
             ஷாஜகான் அங்கேயே அப்போதே இருவருடைய தலையையும் துண்டிக்க ஆணையிட்டார் .. 
            ஆனால் அவரது வயதான பிரதான மந்திரியாக இருந்த பெரியவர் ஒருவர் , அரசே அப்படி செய்யாதீர்கள் ..அது அவர்களுக்கு சரியான தண்டனையாக அமையாது ..கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள் என்று கூறி நான் இவர்களுக்கு சரியான தண்டனையை அளிக்கிறேன் என்றார் ..
             அவர்கள் இருவரையும் நிர்வாணம் ஆக்கி அவர்கள் இருவரும் கட்டிப் பிடுத்துக் கொண்டிருக்கும்படி ஒன்றாக கட்டி அதன் பின் அந்த அரச சபையில் இருந்த ஒரு தூணில் கட்டும்படி ஆணையிட்டார் ..
            இதைக்கேட்ட அங்கிருந்த மற்றவர்களால் இதை நம்ப முடியவில்லை ..இது என்ன தண்டனை இது அவர்களுக்கு ஒரு பரிசு போல அல்லவா அமைந்துள்ளது என்றனர் .. இதைத்தானே அவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்று மற்றவர்கள் நினைத்தார்கள் ...
            அந்த இரண்டு காதலர்கள் கூட இது என்ன தண்டனை .. இது ஒரு வெகுமதி போல அல்லவா இருக்கிறது என்று நினைத்து இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள் ..ஆனால் அவர்கள் நினைப்பு தவறாகி விட்டது ..
             இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் ஓடி விடாதபடி ஒரு கயிற்றினால் கட்டப்பட்டு பிறகு ஒரு தூணில் கட்டப்பட்டு இருந்தனர் ..நீங்கள் எவ்வளவு நேரம் தான் ஒருவரைக் கட்டிப் பிடிக்க முடியும் ..ஐந்து நிமிடம் .. அரைமணி நேரம் .. இருபத்தி நான்கு மணி நேரம் சென்றது .. பிறகு ஒருவரை ஒருவர் வெறுத்தனர் ..
             அவர்கள் இருவருக்கும் வியர்த்தது .. அவர்கள் உடலும் நாற்றம் எடுக்க ஆரம்பித்தது ... இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து அந்த பிரதம மந்திரி அவர்களை விடுதலை செய்யுங்கள் .. அவர்களின் ஆடைகளை கொடுத்து அனுப்புங்கள் என்றார் ..
             அவர்கள் இருவரும் தங்களின் ஆடைகளைப் பெற்றுக் கொண்டு எதிர் எதிர்த் திசையில் ஓடி விட்டனர் .. அதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை .. அவர்கள் போதுமான அளவு சந்தித்து விட்டனர் ..
              உங்கள் உடல் இறக்கப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் ..உயிர்த் துடிப்புள்ள ஏதோ ஒன்று அதனுள் இருந்து கொண்டு உடலை இயக்குகிறது அந்த ஒன்று இந்த உடலை விட்டு பறந்து செல்கின்ற அந்த நொடியே இந்த உடலின் உண்மை நிலை வெளிப்படுத்தப் படும் ..
ஓஷோ ...
விடுதலை 
நீ நீயாக இரு .

No comments:

Post a Comment