Wednesday, 18 December 2019

Focus

A daughter went to her father and said, “I won't go to the temple anymore.”

The father said, “May I ask why?”

She said, “When I go there, all I see is people on their mobile phones during service & bhajan. Some are gossiping, some are just not living with integrity, they are all hypocrites.”

Father became silent, and then said, “OK! Can I ask you to do something for me before you make your final decision?”

She said, “Yes, what's that?”

He said, "Please take a glass of water and walk around the temple 3 times; but you mustn’t let any water fall out the glass.”

She said, "Yes, I can definitely do that.”

When she came back, she said, "It's done and here is the glass of water”

He asked her 3 questions:
1. Did you see anybody on their phone? 
2. Did you see anybody gossiping? 
3. Was anybody living without Integrity?

She said, “I didn't see anything! I was only concentrating on the glass & the water within it, making sure the water never dropped”

He told her, "When you go to the temple, this is exactly what you should be doing; you should only be focusing on, thinking about & connecting to God."

Isn't this equally true about Life?
To succeed, it is important to focus only on completing the task at hand at all costs

Monday, 9 December 2019

பக்தன்

"ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான் ,"

காலங்கள் கடந்தும், சிவனின் தரிசனம் அவனுக்குக் கிட்டவில்லை.

அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை.

கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து, வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான்.

சிவன் சிலையை தூக்கிப் பரண் மேல் வைத்து விட்டு, புதிய விஷ்ணு சிலையை வைத்து, பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி, ஊதுவத்தி, ஏற்றினான்.

நறுமணம் அந்த அறை முழுவதும் பரவியது.

நறுமணத்தை உணர்ந்த அவன், பரண் மீது ஏறி, சிவன் சிலையின் மூக்கைத் துணியால் கட்டினான், அப்போது தான் சிவன் அந்த நறுமணத்தை நுகர முடியாது என எண்ணி...!!

துணியை சிவன் மூக்கில் கட்டிய அடுத்த நொடி, சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார்...

வியந்துப் போன அவன் சிவனிடம் கேட்டான்...

"இத்தனை நாட்கள் உன்னை நான் பூஜித்தப் போது காட்சியளிக்காத நீ, இப்பொழுது மட்டும் காட்சி தருவது ஏன்?"

"பக்தா! இவ்வளவு நாட்கள் நீ (என்னை) இதை வெறும் சிலையாக நினைத்தாய்...

இன்று தான் இந்தச் சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய்...

நீ உணர்ந்த அந்த நொடி, நான் உன் கண் முன் வந்து விட்டேன்!!!" என இறைவன் பதிலளித்தார்.

ஓம் நமசிவாய...
சிவாய..

Tuesday, 5 November 2019

THE Naked Truth

According to a 19th century legend, the Truth and the Lie meet one day. The Lie says to the Truth: "It's a marvellous day today"! The Truth looks up to the skies and sighs, for the day was really beautiful. They spend a lot of time together, ultimately arriving beside a well. The Lie tells the Truth: "The water is very nice, let's take a bath together!" The Truth, once again suspicious, tests the water and discovers that it indeed is very nice. They undress and start bathing. Suddenly, the Lie comes out of the water, puts on the clothes of the Truth and runs away. The furious Truth comes out of the well and runs everywhere to find the Lie and to get her clothes back. The World, seeing the Truth naked, turns its gaze away, with contempt and rage.
The poor Truth returns to the well and disappears forever, hiding therein, its shame. Since then, the Lie travels around the world, dressed as the Truth, satisfying the needs of society, because, the World, in any case, harbours no wish at all to meet the naked Truth.

The world famous painting- "The Truth coming out of the well" Jean-Léon Gérôme, 1896.

Sunday, 13 October 2019

ஆசிரியர்

ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார்.

அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார்.

ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார்.

அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது, என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார்.

இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார்.

"அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர்.

"உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார்.

மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார்.

" எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

" நான் உங்களுக்கு ஒரு நிகழ்வை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். 

" ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார்.

அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது.

எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன்.

அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார்.

ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார்.

நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார்.

எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார்.

எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது.

அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார்.

அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார்.

என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார்.

ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார்.

ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை.

வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை.

அந்த ஆசிரியர் நீங்கள் தான், அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள்.

என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள்.

என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள்.

என்னிடமும் எதுவும் கூறவில்லை.

அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை.

இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது.

அது ஆசிரியர் என்பவர் இப்படி தான்.

கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம்.

இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இவ்வாறான கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்"
என்றார்.

இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.

மேலும் அந்த இளைஞர் கேட்டார், "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனறு.

அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, நீங்கள் யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார்.

"ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார்,

"நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என் மாணவன் எவரையும் நான் தவறானவராக காண விரும்ப வில்லை என்றார் அந்த ஆசிரியர்.

ஆசிரியரைப் போற்றுவோம்.

Wednesday, 2 October 2019

Insect in the kings ear

Here is a short story in a post today

  * He is the king of a great country. *
One night an insect entered the king's ear.

The king had to suffer from the insect that was in his ear.

Their efforts yielded nothing.
Great gifts were announced for those who solved the king's problem.

Doctors came from everywhere.
No one was able to get the insect out.

The king could not sleep.
The food has also declined.

The king lost his brilliance.
A monk arrived from the Himalayas around this time.

The king's ear was well examined.
“This is a very rare species and it is not bound to our herbs.

The insect is bound to a rare herb that grows in a forest about a hundred yards from here.

I am sending my disciples today.
They'll be back in a month's time anyway.

Then don't worry that your problem will be completely resolved.

In three weeks the disciples came with the herb.
The herb juice was poured into the king's ear at the time of Brahma Mukurta before dawn the next morning.

The dead insect came out in the next few seconds.
The monk showed the insect to the king.

The king was now asleep.
Well done
The old glow is back.

The king sent him and his followers with due respect.

One of the monk's disciples asked as they crossed the border.

"" Gurudeva!  Let me tell you a little about that wonderful herb! '

'' The monk smiled.  "" Where do you think the insect was that day ?, in the king's ear, '' it was not.  No, come out right away,

In a short time it caused a seizure within the ears of the king.

It is deeply ingrained in the mind of the king.
The king thought he was still alive in that pest.

"Gurudeva could have explained it and healed the king."

“It is not easy to treat a psychopath!
The king was thinking that the problem was serious.

That's why I pretended the treatment was serious ..

I lied that the herb should come from a distance. "

'' Is that herb? ''
“These are the leaves of a plant that normally grows in our town.
I watched it without anyone noticing.

Then one day after the pooja, in the dark of the morning, the herbal extract was left in the king's ear.

The king trusted.  He's also exhausted. "
Most of the diseases that plague mankind today are on our minds.

The insect that entered the ear had left.
The insect that comes to mind is killing us.

Many of us today are ruining their lives by the circumstances.

"How many people come out and say," If only we had a lot of responsibility, if I had to study big, paid for it, if someone helped, I would be great. "

Many of today's big men were born to a cashless father.

Great study is uneducated.
The problem is not with our parents, our teachers, our school, college or our situation.

It is in our minds.
The pest is on the mind, not on the ear.
Thinking that there is a problem, we are ruining our chances of success !.

Saturday, 28 September 2019

அம்மா...

"என்னங்க இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கனும் இல்ல உங்க அம்மா இருக்கணும் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கங்க"
"என்ன மகா என்ன பண்ணுச்சி அந்த கிழவி... நீ ஏன் டென்சனாகுற... "
" எனக்கு பிடிக்கல அவ்வளோதான்... சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க... "
" நான் இதுக்கொரு முடிவு கட்றேன்... "
மறுநாள் காலை...
" அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா "
" எங்கடா மகேஷ்? "
" உன்ன ஹோம்ல சேர்த்துடுறேன் மா... அங்க உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்...
உன்னபோல நிறைய பேர் இருப்பாங்க அவங்க கூட நீ சந்தோசமா இருக்கலாம் மா... "
" மகேஷ் எனக்கு இங்க என் பேரக்குழந்தைங்க கூட இருக்கறதுதான்டா சந்தோசம்... உங்கப்பா சாகும்போது உனக்கு வயசு எட்டு.. உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் சொல்லி புரியாது... எல்லா கஷ்டமும் தீர்ந்து இப்போதான் நான் பேரக்குழந்தைங்க கூட கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்டா... என் கடைசி காலத்த இங்கயே கழிச்சிட்டு போயிடுறேன்டா... "
" உன்ன இப்போ விலக்கம்லாம் கேக்கல நான்.உயிர வாங்காம கிளம்பு "என்று கொஞ்சம் அதட்டல் தோனியில் மகேஷ் சொல்ல கலங்கி நின்றாள் மரகதம்!
இரண்டு மாதங்கள் உருண்டோடின...
மகேசும் மகாவும் கடைத்தெருவுக்கு சென்று திரும்பும் வேளையில்... எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட மகேஷ் சிறு காயத்துடன் தப்பியிருந்தான்...
மகாவிற்கு பலத்த அடிபட்டு சுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்!
"டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க டாக்டர்... "
Icu வில் இருந்து வெளியேறிய டாக்டரிடம் அழுகுரலில் கேட்டான் மகேஷ்!
" உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல...ஆக்ஸிடன்ட்ல சிதறின சில கண்ணாடி துண்டுகள் அவங்க விழித்திரைய பலமா கிழிச்சிருக்கு... அவங்களுக்கு பார்வை வர வாய்ப்பில்லை... "
" அய்யோ டாக்டர் மகாவுக்கு கண்பார்வை கிடைக்க ஒண்ணுமே பண்ண முடியாதா? "
" ஒரு வழியிருக்கு இறந்தவங்க யாரோட கண்ணையாவது அவங்களுக்கு உடனே பொருத்தினா பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கு... நாங்க ஐ பேங்க்ல சொல்லியிருக்கோம் நீங்களும் உங்க சைட்ல ட்ரை பண்ணுங்க... "
என்று சொல்லி நடந்த டாக்டரை கலங்கும் கண்களோடு பார்த்து கொண்டிருந்த மகேசின் சொல்போன் சிணுங்கியது!
மரகதம் இருக்கும் ஹோம் நம்பர் திரையில் வர... 'நானே கடுப்புல இருக்கேன் இந்த கிழவி வேற பேரனை பார்க்கணும் பேசனும்னு உயிர வாங்குது,சே சனியன கை கழுவி விட்டாலும் நம்மள விடாது போல' என்று முனு முனுத்துக் கொண்டே மொபைல் போனை சுவிட்ஸ் ஆப்செய்தான் மகேஷ்.ஒரு மணிநேரம் கழித்து டாக்டர் வேகமாய் மகேஷிடம் வந்து...
"மகேஷ் யூ ஆர் சோ லக்கி... உங்க மனைவிக்கு கண் கிடைச்சிடுச்சி... இப்போவே ஆபரேஷன் செஞ்சிடலாம்... நீங்க நர்ஸ்கிட்ட கேட்டு பார்மாலிட்டிஸ்லாம் முடிச்சிடுங்க "
" ரொம்ப நன்றி டாக்டர்... ரொம்ப நன்றி " டாக்டரின் கைகளை பிடித்து கண்ணீர் விட்டான் மகேஷ்!
மூன்று மணிநேரம் கழித்து ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்...
" டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க "
" ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது மகேஷ்... இன்னும் ஏழுநாள் கழித்து கட்டு பிரிச்சிடலாம்... அவங்க மயக்கம் தெளிய ரெண்டு மணி நேரமாகும் அதுக்கப்புறம் நீங்க போய் அவங்கள பாருங்க... "
மகா மயக்கம் தெளிந்து கட்டிலில் படுத்திருந்தாள்...
" மகா உனக்கு ஒண்ணுமில்ல மகா நிச்சயம் பார்வை திரும்பிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க... "
" ம்ம்ம்.... நாம அத்தைய தனியா தவிக்க விட்ட பாவமோ என்னவோ இப்படி நடந்துடுச்சி...
திரும்ப அவங்கள கூப்பிட்டு வந்துடுங்க நம்ம கூடவே வச்சுக்கலாம்.... நான் கட்டு பிரிச்சி முதல்ல பார்க்கறது அவங்க முகமாத்தான் இருக்கணும்...! "
" சரி மகா காலையிலே அம்மா போன் பண்ணங்க... சன்டே நான் அவங்கள பார்க்க போகும் போதே பேரக்குழந்தைய பார்க்கணும் போல இருக்குனு கேட்டாங்க.... அதுக்குதான் போன் பண்ணி தொல்ல கொடுக்கறாங்கனு நான் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன் இதோ இப்பவே அம்மாவுக்கு போன் பண்ணி கிளம்பி ரெடியா இருக்க சொல்லிடுறேன் மகா..."
மகேஷ் ஹோம் க்கு போன் பண்ண மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது!
" ஹலோ மேடம் நான் மரகதம் அம்மாவோட மகன் பேசறேன் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! "
" என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே... படிச்சவங்கதானே நீங்க காலையில அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி... கடைசியா மகனையும் பேரனையும் பார்க்கணும்னு சொன்னாங்க... உங்களுக்கு போன் பண்ணா கட் பண்ணிட்டு சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டிங்க... அவங்க மரணத்தோட போராடி உயிர விட்டாங்க... அவங்க கடைசி ஆசைய கூட நிறைவேற்றாத நீங்கலாம் என்ன மனுசங்களோ....
அப்புறம் ஒரு விசயம் எங்க ஹோம்ல யாராச்சும் இறந்துட்டா அவங்க கண்களை தானமா கொடுக்கறது பழக்கம்... உங்களுக்கு போன் பண்ணா நீங்க எடுக்கல அதனால நாங்களா முடிவு பண்ணி கண்ண தானமா கொடுத்துட்டோம்...
உங்க அம்மா உயிரோட இருக்கும் போது உங்கள பார்க்க ஆசப்பட்டாங்க... அவங்க கண் சுகம் ஆஸ்பிட்டல்ல ஒரு லேடிக்கு வச்சிருக்காங்க ஒரு வாரம் கழிச்சி அவங்க கண்ணையாவது போய் பாருங்க அவங்க ஆத்மா நிம்மதியாகும்! "
போனை காதிலிருந்து தரையில் தவறவிட்டு அம்மாாா என்று அழுதபடியே ஓடி மருத்துவமனையின் அறிக்கையை தேடி பிடித்து பார்த்தவன் அதிர்ந்தான்...
அவள் மனைவி மகாவிற்கு கண்தானம் கொடுத்தவர் என்னும் அறிக்கையில் மரகதம் என்றிருந்தது!
இறந்தும் நம்மை வாழ வைப்பது அன்னை மட்டுமே...!

Friday, 6 September 2019

உனக்கென்ன வேணும் சொல்லு

ஒரு *"ராஜா"* தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.
திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்.
மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்.

ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது.
காட்டு வழியே வரும்போது
திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்.
மந்திரியும் காவலர்களும்
வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக்
கொண்டு நின்று விடுகிறார்கள்.

எங்கிருந்தோ *"ஆறு இளையர்கள்"* வந்து
அவர்களை காப்பாற்றுகிறார்கள்.
மந்திரியுடன் ஆறு இளையர்களும் *"ராஜாவிடம்"* வருகிறார்கள்.
*"ராஜாவும்"* மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,
”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்.

*"முதல்"* இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்.
*"இரண்டாவது"* இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்.
*"மூன்றாவது"* இளைஞன் தான் வசிக்கும்
கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.
*"நான்காவது"* இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்.
*"ஐந்தாவது"* இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த
மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்.
அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன *"ராஜா"*,
*"ஆறாவது"* இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன
வேண்டும்” என்று கேட்கிறான்.

இளைஞன் சற்று
தயங்குகிறான்,
*"ராஜா"* மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,
"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்.
வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்.
*"ராஜாவும்"* இவ்வளவுதானா என்று முதலில் கேட்டான்.
பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை.
தெரிந்து கொண்டான்...

ஆம்.
*"ராஜா"* அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்,
அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும்.
வேலைக்காரர்கள் வேண்டும்.
அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்.
சொல்லப் போனால் முதல் *"ஐந்து"* இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும்.
என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,
என்று . . . ,
இந்தக் கதையை முடித்தார்
பேச்சாளர்.

இந்தக் கதையில் கூறிய *"ராஜாதான்"* அந்த *"இறைவன்"*.
பொதுவாக எல்லோரும்
*"இறைவனிடம்"* கதையில் கூறிய ,
முதல் *"ஐந்து"*
இளைஞர்களைப் போல்,
தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்.

கடைசி இளைஞனைப் போல்
*"இறைவனே"*
நம்மிடம் வர வேண்டும் என்று
பிரார்த்தனை
செய்தால் ,
மற்றவை எல்லாம்
தானாக வந்து சேரும் என்பதற்கு,
எடுத்துக் காட்டாக
இந்தக் கதையைக் கூறினார்.