Monday 9 December 2019

பக்தன்

"ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான் ,"

காலங்கள் கடந்தும், சிவனின் தரிசனம் அவனுக்குக் கிட்டவில்லை.

அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை.

கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து, வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான்.

சிவன் சிலையை தூக்கிப் பரண் மேல் வைத்து விட்டு, புதிய விஷ்ணு சிலையை வைத்து, பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி, ஊதுவத்தி, ஏற்றினான்.

நறுமணம் அந்த அறை முழுவதும் பரவியது.

நறுமணத்தை உணர்ந்த அவன், பரண் மீது ஏறி, சிவன் சிலையின் மூக்கைத் துணியால் கட்டினான், அப்போது தான் சிவன் அந்த நறுமணத்தை நுகர முடியாது என எண்ணி...!!

துணியை சிவன் மூக்கில் கட்டிய அடுத்த நொடி, சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார்...

வியந்துப் போன அவன் சிவனிடம் கேட்டான்...

"இத்தனை நாட்கள் உன்னை நான் பூஜித்தப் போது காட்சியளிக்காத நீ, இப்பொழுது மட்டும் காட்சி தருவது ஏன்?"

"பக்தா! இவ்வளவு நாட்கள் நீ (என்னை) இதை வெறும் சிலையாக நினைத்தாய்...

இன்று தான் இந்தச் சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய்...

நீ உணர்ந்த அந்த நொடி, நான் உன் கண் முன் வந்து விட்டேன்!!!" என இறைவன் பதிலளித்தார்.

ஓம் நமசிவாய...
சிவாய..

No comments:

Post a Comment