Sunday, 14 February 2021

தன்ணுணர்வின் கதை - ஓஷோ

❤️ஓஷோ❤️

❤️தன்ணுணர்வின் கதை❤️

ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும்
அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக
இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது
எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு
பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ
அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும்
செய்யமுடியாது.

நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி
ஒரு அழகான கதை உண்டு.

அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால்
உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட
நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை
அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார்.

அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள்.
அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப்
பாத்திரம்தான் வேண்டும் என்றாள்.

நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான்
அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள்
பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து
நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள்.

அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக
உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின்
துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும்.
உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது.
இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக
செய்தேன். என்றாள்.

அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா
சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த
உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை
எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார்.

அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு
திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண
சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க
முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான்.

நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த
கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும்
பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே
அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை
எடுத்துக் கொள்வேன் என நினைத்தான்.

திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில்
பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால்
நடந்ததை நம்பவே முடியவில்லை.

நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து
வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான்
வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக
அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும்
ஓய்வெடுக்கலாம் என நினைத்தார்.

இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு
சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான்
வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக
முடியவில்லை.

அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி.
ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.
மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான்
வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து
உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான்.

நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான்
அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார்.

திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து
பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான்.
ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும்
மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும்
இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக
அவன் தெய்வீகத்தை உணர்ந்தான்.

அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற
இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான்.

நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே
இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார்.

திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது
இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை
பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை
பொக்கிழத்திற்க்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது
நான்தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள்
இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே
நான் எப்படி மாற முடியும் என்றான்.

நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே
இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு
வந்தால், இருள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை
உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக
இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு,
ஆயிரக்கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார்.

திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள்
வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும்.
நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு
பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன்
இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார்.

திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக்
கேட்டான்.

நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும்.
எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில்
வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான்
செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார்.

திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம்
சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்புதான்
தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான்.

நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம்
செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின்
முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு
வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும்போது, வேறு யாருடைய
வீட்டிற்க்குள் இரவில் நுழையும்போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை
திறக்கும்போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி.
என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே.
என்றார்.

திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே.
ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான்.

நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன்
சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார்.

பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப
வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில்
விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட
முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து
நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால்
என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க
முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு,
கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள்
எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன
செய்வது என்று கேட்டான்.

நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய
விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை
நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட
வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு.
நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார்.

அந்த மனிதன், என்னால்  தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது.
இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை உங்களது சீடனாக ஏற்றுக்
கொள்ளுங்கள். எனக்கு தீட்சையளியுங்கள் என்று கேட்டான்.

நாகார்ஜூனா, நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து
விட்டேன் என்றார்.

ஓஷோ

Saturday, 13 February 2021

பிரபஞ்சம்

நீங்கள் எப்போதாவது மரத்திற்கு வணக்கம் சொல்லியிருக்கிறீர்களா ?

 சொல்லித்தான் பாருங்களேன் !  

ஒரு நாள் ஆச்சரியப்படுவீர்கள். மரமும் ஒரு நாள் தன் நாவில், தனது மொழியில் உங்களுக்குத் திருப்பிச் சொல்லும் !

ஒரு மரத்தைக் கட்டி அணைத்துப் பாருங்கள். 

கைகள் இல்லா விட்டாலும் கூட , 

அதுவும் உங்களைத் திருப்பி அணைப்பதை ஒரு நாள் நீங்கள் உணர்வீர்கள். 

மகிழ்ச்சியை , வருத்தத்தை, சினத்தை ,அச்சத்தை தன் வழியில் அது உணர்த்தவே செய்கிறது .

இந்த பிரபஞ்சமே உணர்வு மிக்கது.

 "பிரபஞ்சமே கடவுள்" என்று நான் குறிப்பிடுவது இதைத்தான்.

சத்தியம், நீ முதலில் நட்பாக இரு. 

 மற்றவர் நட்புச் செலுத்துகிறாரா . இல்லையா என்று கவலைப்படாதே . 

அது ஒரு வியாபார ரீதியான கேள்வி. 

 ஏன் கவலைப்படுகிறாய் ? 

இந்த இயற்கை முழுவதையுமே உனக்கு நட்புடையதாக ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது ? 

ஏன் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை இழந்து விட வேண்டும்?

*🍃ஓஷோ🍃*

Friday, 12 February 2021

made in China

A Chinese man came to Kerala. He took a taxi at Kochi airport.

On his way, by seeing a bus, he told the taxi driver, that in Kerala buses run very slow. In China buses run very fast.

After sometime, he came near a railway bridge and saw a train passing over the bridge. Then the Chinese man told the driver, that the trains also run very slow here. In China trains run very fast.

Throughout the journey he complained to the driver disparaging Kerala. However, the taxi driver kept mum throughout the journey.

When the Chinese man reached his destination, he asked the driver what is the meter reading and taxi fare thereon.

The taxi driver replied it is Rs.10,000/-

The Chinese was shell shocked after hearing the taxi fare. He shouted "are you kidding? in your country buses run slow, trains run slow, everything is slow. How come the meter alone runs fast?"

To this the taxibro replied calmly,

Sir,  

*"THE METER IS MADE IN CHINA"*

😜😂😜😂😀😀😀

Wednesday, 10 February 2021

உமையம்மையின் சந்தேகம்

உமையம்மையின் சந்தேகம், அதன் மூலம் நாம் அடையும் ஞானம் பற்றிய ஒரு சிறுகதை.

கையிலாய‌த்தில் சிவபெருமான் வீற்றிருந்தா ர். அவருடைய அருகில் இருந்த உமையம்மை அவரிடம் “ஐயனே, எனக்கு ஒரு சந்தேகம்” என்றார். “கேள்” என்றார் சிவபெருமான்.

அம்மை ஆரம்பித்தார்.

 “கங்கை என்பது புனித நதி. அதில் நீராடுபவ ர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்குவதாக நீங்களே கூறியுள்ளீர்கள். தினமும் லட்சக்க ணக்கானோர் அதில் நீராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களின் வாக்கின்படி அவர்களின் பாவங்க ள் நீங்கியிருந்தால் அவர்களின் மறைவிற்குப் பின் அனைவரும் சொர்க்கத்திற்கு வந்து சொ ர்க்கம் நிரம்பி இருக்கவேண்டும் அல்லவா?

ஆனால் அவ்வாறு நடக்கவில்லையே ஏன்?” என்று கேட்டார்.

 உமையம்மையின் கேள்விக்குப் பதிலாக புன்னகைத்த சிவபெருமான் “இந்தக் கேள்வி க்கு விளக்கம் சொன்னால் உனக்கு புரியாது. ஆதலால் நீ என்னுடன் நேரடியாக கங்கைக்கு வா. நான் சொல்கிறபடி செய். உன்னுடைய கேள்விக்கு விடை கிடைக்கும்.” எனறார்.

கங்கையில் திருவிளையாடல்

பின்னர் சிவபெருமான் 80 வயது நிரம்பிய முதியவராகவும், உமையம்மை 75 வயது நிரம்பிய முதியவளாகவும் உருமாறி கங்கைக் கரையை அடைந்தனர்.

கங்கையில் நிறையப்பேர் நீராடிக் கொண்டிரு ந்தனர். முதிய தம்பதியரும் கங்கையில் நீராடுவதற்காக இறங்கினர். சிறிது நேரத்தில் முதியவரை கங்கை நீர் இழுத்துச் செல்லத் தொட‌ங்கியது.

இதனைப் பார்த்ததும் முதிய பெண்மணி “ஐயோ, என்னுடைய கணவனை கங்கை இழு. த்துச் செல்கிறது. யாராவது அவரைக் காப்பா ற்றுங்கள்” என்று அலறினாள். நிறைய பேர் அவரை காப்பாற்ற முன்வந்தனர். அந்த கிழவி தொடர்ந்து கத்தினாள்.

“பாவங்கள் இல்லாத யாரேனும் அவரை காப் பாற்றுங்கள். பாவங்களுடன் அவரைத் தொட் டால் என்னுடைய கணவரும், அவரைத் தீண்டி யவரும் எரிந்து சாம்பலாவர். அப்படி ஒரு சாப ம் அவருக்கு உள்ளது. பாவங்கள் இல்லாத யாராவது அவரை உடனடியாகக் காப்பாற்று ங்கள்.” என்று கதறினார்.

அப்பெண்மணியின் கதறல் அங்கிருந்தோர்க ளை உருக்கியது. ஆனாலும் முதியவரின் சாப த்தை எண்ணி எல்லோரும் பின்வாங்கினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவன் கரை யிலிருந்து ஆற்றில் குதித்தான்.

வேகவேகமாக நீந்தி முதியவரின் அருகே சென்றான். அனைவரும் அரண்டுபோய் முதிய வரையும் அவரைக் காப்பாற்றச் சென்றவனை யும் பார்த்த வண்ணம் இருந்தனர்.

அவன் அவரைத் தொட்டான். என்ன அதிசயம்! இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை. அவன் முதியவரை ஆற்றிலிருந்து வெளியே இழுத்து வந்தான். அவன் முதியவருக்கு முதலுதவி செய்தான். அவரும் பிழைத்துக் கொண்டார். மூதாட்டி நன்றியுடன் அவனைக் கையெடுத்து கும்பிட்டார்.

உடனே எல்லோரும் காப்பாற்றிய நபரை ஆவ லுடன் பார்த்தனர். அவனைப் பார்த்ததும் மிக வும் அதிர்ச்சிக்கு அடைந்தனர். ஏனெனில் காசியில் அவன் மிகப்பெரிய திருடன். நிறைய பாவங்களைக் கொண்டவன்.

‘இவன் எப்படி பெரியவரைக் காப்பாற்றினான். பெரியவரின் சாபம் இவனை ஒன்றும் செய்ய வில்லையா?’ என்று எண்ணியவாறு ஆச்சர் யப்பட்டனர்.

அப்போது திருடன் “உங்களுடைய ஆச்சர்யம் எனக்குப் புரிகிறது. நான் காசியிலேயே மிகப் பெரிய திருடன். நிறையப் பாவங்கள் செய்தவ ன். நான் அவரைத் தொட்டாலும் ஒன்றும் ஆக வில்லையே என்று தானே நினைக்கின்றீர்கள்.

அந்தப் பாட்டி கதறியபோது நானும் அப்படித் தான் நினைத்தேன். ஆனால் எனக்குத் திடீரெ ன்று, “கங்கையில் குளித்தால் நம் பாவம் எல் லாம் நீங்கிவிடும்” என்று அம்மா சொன்னது ஞாபகம் வந்தது.

உடனே அந்த நம்பிக்கையோடு விஸ்வநாதரை மனதில் நினைத்துக் கொண்டு தைரியமாக கங்கையில் குதித்தேன். கங்கையில் குதித்த தால் என்னுடைய பாவங்கள் நீங்கின. ஆதலா ல் பெரியவரை நான் தொட்டபோது அவருடை ய சாபம் என்னை ஒன்றும் செய்யவில்லை.” என்று கூறினான்.

அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது, கங்கையில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் இல்லை என்பது.

உமையம்மைக்கும் சொர்க்கம் நிரம்பி வழியா ததற்கான காரணம் புரிந்தது. உமையம்மையி ன் சந்தேகம் போல் உங்களுடைய சந்தேகமும் தீர்ந்து விட்டது அல்லவா? இறைபக்தி என்பது இறைவனின் மீதான உண்மையான நம்பிக்கை ஆகும்.

நம்முடைய வாழ்வில் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை என்பது அவசியமானது. நம்பிக்கை யுடன் செய்யும் செயலானது நம்மை வாழ்வில் உயர்வடையச் செய்யும். ஆதலால் எல்லோரும் எந்த நல்ல செயலை செய்யும்போதும் முழுமை யான நம்பிக்கை கொள்ளுங்கள்.

வாழ்வில் உன்னத நிலையைப் பெறுங்கள்..

ஓம் நமசிவாய...
தென்னாடுடைய சிவனே போற்றி...

பெண் பேயிடம் ஒரு கேள்வி - ஜென்

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை  சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக  நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை.  நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று  எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால்,  தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “,  என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.

அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள்.  அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள்.  அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்” என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற , செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான்.  அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ  பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!

அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை,  அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும்  நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.

சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய  அள்ளி, ” என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான்,  அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!

என்ன, கதையைக் கேட்டாச்சா?  சரி, இப்போ நாம இந்தப்பதிவோட முக்கியமான செய்திக்கு வருவோம். அதாவது, கதை சொல்வதும் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் அடிப்படைக் கருத்தை (மையக்கருவை) புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி என்கிறீர்களா? உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக் கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்….

“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”

“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது இந்தப் பேய் என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள்  எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”

“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”

” அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”

” நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”

இன்னும் சிலர்…..

“எனக்கு இந்தக் கதையின் முடிவு பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத் தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”

“ஆமாம் , அவன் ஒரு ஜென் துறவியைச் சந்தித்தான் என்று ஏன் அந்தப் பேயால் கண்டுபிடிக்க முடியவில்லை?”

ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள் எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்!

உண்மையில் பேய்கள் என்பது நம் பயங்களும், மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும் உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல புலம்பவும் செய்யும்! ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.

இதைத்தான் சொல்கிறது ஜென் வரலாறு. ஜென் துறவிகள் நம் கற்பனைப் பேய்களைவிட (மனித மனங்கள்!) அதிபுத்திசாலிகளாம். ஆனால், ஜென் துறவிகள் ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே இருக்கின்றனர்(பேய்கள் எங்கே இருக்கின்றன?). அவர்கள் சொல்வது என்னவென்றால், பேய்கள் என்பவை  நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான்.  பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு ஒருவர் வந்து  நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள்!

அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம், பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை….) நாமேதான் அழிக்க வேண்டும். மொத்தத்தில் பேய்கள்  நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப் பிரம்மைகள்தான்! அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றோமானால், நலமான வளமான வாழ்வை வாழலாம்!

இந்த ஜென் கதையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Tuesday, 9 February 2021

காதல் - திருமணம்

*சிரிக்க-சிந்திக்க*
ஒரு ஞானியிடம், அவரது சீடன் ஓரு கேள்வியை கேட்டான். அதாவது *“காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?* ”என்ற கேள்வியை உதிர்த்தான். இதற்கு பதில் அளித்த ஞானி, *நீ ரோஜா தோட்டத்துக்கு போ. அங்கு உனக்கு பிடித்த உயரமான ரோஜா செடி ஒன்றை பிடுங்கி வா. ஆனால் ஒரு நிபந்தனை., எக்காரணத்தை கொண்டும் நீ போன வழியில் திரும்பி வரக்கூடாது* என்றார்.

உடனே அந்த சீடன் அங்கிருந்து புறப்பட்டு ரோஜா தோட்டத்துக்கு சென்றான். சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி கேட்டார்,”எங்கே உயரமான ரோஜா செடி?”. அதற்கு சீடன் ,” குருவே, நான் தோட்டத்தில் கால் வைத்ததும் உயரமான ஒரு ரோஜா செடி என்னை கவர்ந்தது. ஆனால், அதை விட உயரமான ரோஜா செடி கிடைக்கும் என்று கருதி, தொடர்ந்து நடந்தேன். ஆனால் அதன் பின் அங்கிருந்தவை அனைத்தும் குட்டையான ரோஜா செடிகள்தான். போன வழியில் திரும்பி வரக்கூடாது என்று நீங்கள் நிபந்தனை கூறி இருப்பதால், முதலில் பார்த்த உயரமான ரோஜா செடியை பறித்துக்கொண்டு வர முடியாமல், வெறுங்கையுடன் வந்து விட்டேன்” என்றார்.

இதனை கேட்ட ஞானி, “அதோ அந்த சூரிய காந்தி தோட்டத்துக்கு சென்று, *ஒரு நல்ல, அழகான சூரியகாந்தி செடியை பிடுங்கி வா., ஆனால் ஒரு நிபந்தனை., ஒரு செடியை பிடுங்கிய பின், வேறு ஒரு செடியை பிடுங்க கூடாது* ”என்றார். சிறிது நேரம் கழித்து, ஒரு சூரிய காந்தி செடியுடன், சீடன் வந்து சேர்ந்தான். அப்போது, ஞானி கேட்டார்,-”இதுதான், அந்த தோட்டத்திலேயே அழகான செடியா?”என்று. உடனே அந்த சீடன், “ இதை விட அழகான செடிகள் எல்லாம் இருந்தன. ஆனால் இந்த முறை கோட்டை விட்டு விடக்கூடாது என்று கருதினேன். உங்கள் நிபந்தனை படி, ஒரு செடியை பிடுங்கிய பின், வேறொரு செடியை பிடுங்கக்கூடாது அல்லவா? எனவே, முதலில் அழகாக தோன்றிய ஒரு சூரிய காந்தி செடியை பிடுங்கிக்கொண்டு, திரும்பி பார்க்காமல் ஓடி வந்து விட்டேன்” என்றான்.

அப்போதுதான் ஞானி சொன்னார்: “ *இதுதான் திருமணம். முதலில் நீ ரோஜா தோட்டத்துக்கு சென்று வெறுங்கையாக திரும்பினாயே,, அதுதான் காதல்*. இப்போது புரிகிறதா *காதலுக்கும், திருமணத்துக்கும் உள்ள வித்தியாசம்* 

சீடன்: ஆம் புரிகிறது., புரிகிறது… என்று தலையாட்டினான்.

வாழ்க்கையை வாழ்வது எப்படி - ஜென்

வாழ்க்கை வாழ்வது எப்படி ❤

ஜென் கதைகள் ...
இளைஞன் ஒருவன் " வாழ்க்கை வாழ்வது எப்படி" என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென்குருவை தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான்.
ஜென்குருவை சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான்.

ஆஸ்ரமத்துக்கு வந்ததும் அங்கு ஒரு இளம் துறவி இருந்தார். அவரிடம் " வணக்கம் ஐயா வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக குருவைப் பார்க்க வந்திருக்கிறேன் " என்றான்.

" ஓ..... அப்படியா குரு தியானத்தில் இருக்கிறார் . முன் அறையில் அமருங்கள் வருவார். " என்றவர் .

ஒரு கோப்பை நிறைய சூடான தேனீரை ஊற்றிக் கொடுத்தார்.
இயற்க்கை எழில் கொஞ்சும் மலையையும் , குளிர்ந்த காற்றையும் ,சில்வண்டுகளின் சத்தத்தில் குயிலோசையையும் மடாலயத்தின் மௌனத்தையும்,ரசித்துக் கொண்டிருந்ததில் சூடான தேனீரை குடிக்க மறந்தே போய்விட்டான் . தேனீர் ஆறிபோய்விட்டது.

சிறிது நேரத்தில் குரு அவனை நோக்கி வந்தார் . அவன் எழுந்து வணங்கினான் .

குருவின் கண்களில் கனிவும் மென்மையும் தெரிந்தது.
"வாழ்க்கையை எப்படி வாழ்வது? என்ற கேள்விக்கு விடை கேட்டு வந்தேன்" என்றான் .

குரு லேசாக புன்னகை செய்தார் .பின்னர் " உன் கோப்பையில் உள்ள தேனீர் ஆறிப்போய் இருக்கிறதே!. அதை வெளியில் கொட்டிவிடு " என்றார்
அவன் அப்படியே செய்தான்.

பின்னர் குரு அந்த கோப்பையில் சூடான தேனீரை ஊற்றி நிரப்பினார்.
அவன் அதை குடிக்க ஆரம்பிப்பதற்குள் . குரு மீண்டும் தியானம் செய்ய சென்றுவிட்டார் .
அவன் மிகுந்த ஏமாற்றத்துடன் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான் அப்போது மீண்டும் அந்த இளம் துறவியை பார்த்தான்.
"உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?" என்று கேட்ட துறவியிடம் நடந்ததை கூறினான்.
அதற்கு அந்த துறவி "குரு உங்கள் கேள்விக்கு சரியான பதிலை கூறிவிட்டாரே"!! என்றார்.
"ஜென் என்றால் அந்தந்த நொடியில் வாழ்வது என்று பொருள்.
மனம் என்னும் கோப்பையில் பழைய ஆறிப் போன எண்ணங்களை கொண்டு வாழாமல் , இந்த அப்பொழுதில் சுடச்சுட வாழ்வதுதான் வாழ்க்கையை வாழும் முறை .

இதைத்தான் குரு உனக்கு செய்து காட்டி இருக்கிறார்."
வாழ்க்கையை எப்படி வாழ்வது என்னும் முறையை புரிந்து கொண்டான் . அந்த நொடியில் வாழத்தொடங்கினான்