படித்ததில் பிடித்தது.
உங்கள் வாழ்வின் சில மணித்துளிகளை செம்மை படுத்த செம்மொழிக் குறுங்கதைகள் இங்கே விதைக்கப் படுகின்றன. ~*~
Saturday 30 December 2023
யார் காரணம்?
ஒரு ஜாடியில் 100 கருப்பு எறும்புகளையும் 100 சிவப்பு எறும்புகளையும் போட்டால் ஒன்றும் ஆகாது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் நீங்கள் ஜாடியை கடுமையாக அசைத்தால், எறும்புகள் ஒன்றையொன்று கொல்லத் தொடங்கும். சிவப்பு எறும்புகள் கருப்பு எறும்புகளை தங்கள் எதிரிகளாகவும், கருப்பு எறும்புகள் சிவப்பு எறும்புகளை தங்கள் எதிரிகளாகவும் கருதுகின்றன. ஜாடியை அசைப்பவனே உண்மையான எதிரி. மனித சமூகத்திலும் இதேதான் நடக்கிறது. ஆக, ஒருவரையொருவர் தாக்கும் முன், ஜாடியை அசைப்பது யார் என்று யோசிக்க வேண்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment