Friday 29 December 2023

மை-என். எஸ். கிருஷ்ணன்

மை...
ஒரு சமயம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.

“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
மையை 
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?

சிலர்
தற்பெரு“மை“ யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

சிலரோ பொறா“மை" யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

வேறு சிலரோ
பழ“மை“ யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

பரவாயில்லை.
இவற்றையெல்லாம்
அரு“மை“ யான
எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில
“மை“கள்
உள்ளன.
இவை என்ன தெரியுமா?

கய“மை“,
பொய்“மை“,
மட“மை“,
வேற்று“மை“ 
ஆகியவைதாம்.

கூட்டத்தில் கைத்தட்டல் எழுந்தது.
“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய
“மைகள்“
என்னென்ன தெரியுமா?

நன்“மை“ 
தரக்கூடிய
நேர்“மை“,
புது“மை“,
செம்“மை“,
உண்“மை“.
இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது
எவைத் தெரியுமா?

வறு“மை“,
ஏழ்“மை“,
கல்லா“மை“,
அறியா“மை“
ஆகியவையே.

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்
கட“மை“ யாகவும்,
உரி“மை“ யாகவும்
கொண்டு சமூகத்திற்குப்
பெரு“மை“
சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.

கூட்டத்தில் உற்சாக ஒலி 
விண்ணைப் பிளந்தன.

No comments:

Post a Comment