Thursday 4 May 2023

தற்கோலை முயற்சி

ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்…

நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா… ???

குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்…!

நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல… அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்… பொல்லாத பிராப்ளம்… !!???

குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே…
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்… 👇👇👇👇

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்…. 😊😊

ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்… 😡😡

அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்… 😈😈

அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்…! 😀😀

என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்… 😢😢

காலம் ஓடியது…..

என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்….

அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்…😕😕

என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்…😥😥

என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்…. 😢😢

அவனே எனக்கு பேரனும் ஆனான்…😇

என் மகளின் மகன் அல்லவா? 😁😁

அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்…😂😂

என் சித்திக்கு தாய் அல்லவா? 😊😊

நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று… 👌👌

ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? 😥😥

அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்… 😕😕

இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்…☺☺
.
.
.

நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்…

😊😊😢😢😁😁

No comments:

Post a Comment