Sunday 15 January 2023

பாடம்

_மனைவி இறக்கும்போது,_ _*அவருக்கு வயது 45 இருக்கும்*._ _உறவினர்கள், *நண்பர்கள்*_ _அனைவரும் *அவரை மறுமணம்* செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், *அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை*_

_என் மனைவி, *அவள் நினைவாக* எனக்கு *ஒரு மகனை* விட்டு சென்றிருக்கிறாள்._ _*அவனை வளர்த்து* ஆளாக்குவது ஒன்றே *இனி என் வேலை*. அவன் சந்தோஷத்தில் *அகமகிழ்ந்து*, அவன் வெற்றியில் நான்_ *_திளைத்திருப்பது_* _எனக்கு போதும்._ _*அவனுக்காக வாழ போகிறேன்*_

_இன்னொரு துணை_
*_எனக்கு தேவையில்லை_* _என்று சொல்லிவிட்டார்._

_வருடங்கள் உருண்டோடியது._
_மகன் வளர்ந்து_
_பெரியவனானதும்,_
_தன் வீட்டையும்,_
_வியாபாரத்தையும்_ 
_மகனிடம் எழுதி கொடுத்து விட்டு ஓய்வு பெற்றார்._

_மகனுக்கு திருமணமும் செய்து வைத்து,_
_அவர்களுடனேயே தங்கியும் விட்டார்._

_ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம்_ 
_சீக்கிரமாக காலை_ _உணவு உண்ண,_
_*மருமகளிடம்* ரொட்டியில் தடவ_ _*வெண்ணெய்*_ _தருமாறு கேட்டார்._
_*மருமகளோ வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள்*_

_மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார,தகப்பன்_ _வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார்._

_*மகன்* உணவருந்தும் போது, *மேஜையில் வெண்ணை* கொண்டு வந்து வைத்தாள் *மனைவி*. ஒன்றும் பேசாமல் , *மகன்* தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான். *அந்த வெண்ணையை* பற்றிய சிந்தனையே *அந்நாள் முழுதும்* அவன் எண்ணத்தில் *ஓடிக்கொண்டு இருந்தது*._

_மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான். அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான்.ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க..._

_நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும்,உங்கள்பெயருக்கே மாற்றி கொள்ளுங்கள்._

_இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன்._
_மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன், என்றான்.._

_ஏன் இந்த திடீர் முடிவு?. இல்லை அப்பா *உங்கள் மதிப்பு* என்னவென்று *என் மனைவிக்கு* உணர்த்த வேண்டிய *கட்டாயம் வந்துவிட்டது*._

_*சாதாரண வெண்ணைக்காக* நீங்கள் கையேந்தும் *நிலை வரக்கூடாது*_
_ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை *அவள் உணர வேண்டும்*. மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்..._

_பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ATM கார்டாக இருக்கலாம்.._ 

_ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்த கதையின் கருப்பொருள்._

_பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை._

                  படித்ததில் பிடித்தது.......💐💐💐

No comments:

Post a Comment