Monday 23 May 2022

மாற்றம்

ஒரு நாள் கணவரும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து பொறித்த கோழி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், அப்போது ஒரு பிச்சைக்காரன் அவர்களின் வீட்டுக் கதவை தட்டினார், அதற்கு கணவர் யார் கதவைத் தட்டுகிறார் என்றுக் கேட்டார்? மனைவி பிச்சைக்காரன் தட்டுகிறார் அவருக்கு கொஞ்சம் கறியைக் கொடுங்கள் என்றாள்..

அதற்கு கணவன்: வேண்டாம் வேண்டாம் அதெல்லாம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..

அந்த பிச்சைக்காரனை, துரத்திவிடனர். பின்னர் நாட்கள் கடந்தன, அந்தக் கணவர் வறுமையில் சிக்குண்டு தவியாய் தவித்து அவரும் மனைவியையும் விவாகரத்து பெரும் நிலைமை ஆயுற்று, அந்தப் பெண் வேறொருவரை மறுமணம் செய்துக்கொண்டார், ஒரு நாள் தன் இரண்டாம் கணவருடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அவர்களருகில் பொறித்த கோழி இருந்தது, அந்நேரத்தில் கதவு தட்டப்பட்டது, அப்போது கணவர் மனைவியிடம் சொன்னார், பிச்சைக்காரன் வந்திருப்பதைப் போல தெரிகின்றது. இந்த முழுக் கோழியையும் அவருக்கு கொடுத்து விடு என்றார், அவருடைய மனைவி அங்கு சென்று அந்த கறியைக் கொடுத்துவிட்டு வரும் போது அழுதுக் கொண்டே வந்தாள்...

கணவன் கேட்டார்: ஏன் அழுகிறாய்? அதற்கு அவள் அந்த யாசகம் கேட்பவர் யாரென்று தெரியவில்லையா என்றாள்?

அதற்கு கணவன்: இல்லை, தெரியவில்லையே என்றார்..

அதற்கு அவள்:
அவர் தான் என்னுடைய
முதல் கணவர்..

அதற்கு அவர் கேட்டார்:
நான் யாரு என்று தெரிகிறதா?..

அதற்கு அவள்: இல்லை தெரியவில்லையே என்றாள்..

அதற்கு கணவன்: நான் தான் முதலில் யாசகம் கேட்டு வந்து உன் முதல் கணவரால் துரத்தியடிக்கபட்ட பிச்சைக்காரன் என்றார்..

நம் நிலைமை எப்படி
வேண்டுமானாலும் கடவுள் மாற்றலாம்..

யாருடைய நிலைமை எப்படி மாறும் என்று கடவுளை தவிர வேறு யாருக்கும் தெரியாது....

உங்களிடம் செல்வம் இருக்கிறது.!
என்று மற்றவர்களை கீழ்த்தரமாக பார்க்காதீர்கள்..

ஆடம்பர வாழ்வு நிலையற்றது....

No comments:

Post a Comment