Monday 19 February 2018

ஒன்னு மட்டும் உண்மை

சிரிக்க.... சிந்திக்க....

சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான், வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான்..

ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள்.

வந்தவள் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டாள்.

அம்மா கேட்டாள் "யாரு இது?"

சேகர் சொன்னான் "என் ரூம்மேட்மா".

அம்மா "அப்படீன்னா?"

"ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு,

நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒன்னும் இல்லம்மா,

வீட்டை மட்டும் தான் ஷேர் பண்ணுறோம்..

அவ தனி பெட்ரூம், நான் தனி பெட்ரூம் "

அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய் விட்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய ரூம்மேட் சொன்னாள் ;

"உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்து தோசை கரண்டியைக் காணலை,
ஒரு வேளை உங்கம்மா எடுத்துப் போயிருப்பாங்களோ?"

சேகர் சொன்னான் "தெரியலை, எங்க கிராமத்து வீட்டுல வேற போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டு கேக்கிறேன் "

அவன் அம்மாவுக்கு கடிதம் எழுதினான் *அன்புள்ள அம்மா..*

நான் *நீங்கள் இங்கேஇருந்த தோசை கரண்டியை எடுத்தீங்கன்னு சொல்லலை*
*எடுக்கலைன்னும் சொல்லலை*
ஆனா ஒண்ணு மட்டும் உண்மை,
*என் வீட்டுல இருந்து நீங்க போனதுக்கு அப்புறம் தோசை கரண்டியை காணவில்லை*.!

சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது.. அதை சேகர் பிரித்து படித்தான்
*அன்புள்ள மகனுக்கு*..

*நான் நீ உன் கூட வசிக்கிற பொண்ணோடு நீ தப்பா இருக்கறேன்னு சொல்லலை இல்லைன்னும் சொல்லலை ஆனா ஒண்ணு மட்டும் உண்மை*..

அவள் அவ பெட்டுல தூங்கி இருந்தா *இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டு பிடிச்சு இருப்பா*...!

No comments:

Post a Comment