Tuesday, 10 October 2023

பெரிய பிரச்சினை எளிய தீர்வு

ஒருத்தனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போய் விசயத்தச் சொன்னான்.

" டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே. "

டாக்டரு சொன்னாரு..

"தம்பி, சரி பண்ணிடலாம். 
வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க.  
சரி பண்ணிடலாம்!" 

"ரொம்பத் தேங்ஸ் டாக்டர். 
எவ்வளவு பீஸு?"

" ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி. நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹ சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹. "

" ஓ அப்டீங்களா? சரிங்க 
டாக்டர் ஐயா. வர்றேன். "

ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.

ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு ப்ளாட்பாரக் கடையில காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.

" அடடே என்னா தம்பி, 
அப்புறம் வரவே இல்லே? "

"அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு."

" ஓ! அப்டியா,எப்டி சரியாச்சி? "

" நம்ம விருதுநகர் அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம். "

டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.

" என்ன தம்பி சொல்றீங்க? 
வெவரமா சொல்லுங்க! "

" அது ஒண்ணுமில்லீங்க. அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு. அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன். இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே. "😄

சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

Friday, 22 September 2023

உழைப்பு

மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ? என்று படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...

நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது ....

நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.....

ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க...எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை....

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.....

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்..

அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்...

இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது....

கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்...அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது. விவசாய வேலைக்கு ஆள் வராது... ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்...
எப்படி வருவான்னேன்.....?

பணம் வேணும்னு உழைக்கிறாங்க....
கட்டு கட்டா பணம் இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்...?

பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத் துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியதுதான்...!

ஊரே தூக்கம் வராம கெடக்கும்....

இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்லை.... வெத்து பேப்பர்தான்னேன்....
உழைப்புதான் பணம்ன்னேன்...

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்....

உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது.... ஒன்னுமே கெடையாது....
இப்ப தெரிஞ்சுதா...?

உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்..."

இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன், படிக்காத மேதை ... சொன்னது.

Thursday, 21 September 2023

duck or eagle ypu decide

நண்பர் வெளியூர் செல்ல Call Taxi 
ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்டியிருந்த ஆங்கில வாக்கியம்.

*Duck or Eagle
You decide*

அடுத்து அவர் கவனத்தை 
கவர்ந்தது (Clean and shiny)பளிச்சென்று சுத்தமாக இருந்த கார்.

டிரைவர் நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார்.

அவரே வந்து கார் கதவை திறந்து 
நண்பரை அன்போடு அமர சொன்னாராம்.

அழகான டிரைவிங். கேட்டதற்கு 
மட்டும் தெளிவான பதில்.

நண்பர் அந்த ஓட்டுனரின் அழகிய செயல்களால் மிகவும், கவரப்படார்.

பொதுவாக Call Taxi டிரைவர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்ட்த்தோடு.

இந்த டிரைவர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார்.
பட்டதாரியும் கூட.

அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

இல்லை சார். நானும் மற்ற டிரைவர்ஸ் 
போல்தான் இருந்தேன். சத்தம் போட்டு கொண்டு.குறை கூறி கொண்டு "என்றார்.

எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

ஒரு Client seminar ஒன்றிற்கு சென்றார் . சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நுழைந்தேன். அந்த seminar என்னை மாற்றி விட்டது" என்றார்.

என்ன Seminar?

உங்களை நீங்களே உயர்த்திக் 
கொள்வது எப்படி ?

என்ன சொன்னார்கள்?

பல அறிவுரைகள். என்னை மிகவும்
கவர்ந்தது இதுதான்.

காலையில் எழுந்திருக்கும் போதே
இந்த நாள் சரியாக இருக்காது என்று எதிர்மறை சிந்தனையோடு எழுந்தால் அந்த நாள் கண்டிப்பாக நன்றாக இருக்காது."

இதையே ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
அப்போதுதான் அதன் ஆழம் புரிந்தது.

*If you get up in the morning 
expecting a bad day,you will.

Don't be a Duck
Be an Eagle*

*The ducks only make noise and complaints.
The eagles soar above the group*.

அந்த அறிவுரை என்னை
மிகவும் கவர்ந்தது.

என்னை நானே சுய பரிசோதனை
செய்து கொண்டேன்.

நான் Duck போல இருப்பதை உணர்ந்தேன். ஏன் Eagle போல இருக்க கூடாது என்று எண்ணினேன். என்னை நானே மாற்றி கொண்டேன் என்றார்.

எல்லா Customer இடமும் அன்போடு பணிவாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.

மன அமைதி மட்டுமல்ல. என் வருமானமும் பெருகியது. Always my taxi busy.ஒரு முறை பயணம் செய்தவர்கள், என்னையே அழைக்க ஆரம்பித்தார்கள்" என்றார்.

நண்பர் சொன்னபோது எனக்கே
அவரை பார்க்க வேண்டும் போல்
இருந்தது.

அவர் சொன்னது உண்மைதான். 

எந்த வேலையாக இருந்தாலும்,
நாம் நடந்து கொள்ளும் நடத்தையும்,அர்ப்பணிப்பு உணர்வுமே,
(behaviour and involvement) நம்மை உயர்த்தும். 

உயர உயர வாழ்வில்
Eagle போல பறக்க வைக்கும்.

இப்பொழுது நம் முன்னால் 
இருக்கும் ஒரே கேள்வி :

நாம் எப்படி வாழ வேண்டும்?
Duck or Eagle ?

முடிவு எடுக்க வேண்டியது நாமே.

நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக, 
நல்ல அப்பாவாக, நல்ல கணவனாக, 
நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக, குறிப்பாக நல்ல குடிமகனாக மாறுவது
எல்லாமே நம் கையில்தான்.

பயணிக்க போவது சிறிது காலமே. அனைவரிடமும் அன்பை செலுத்துவோம். அன்பை பெறுவோம். நம்மை நாமே 
உயர் சிந்தனையால் Eagle போல 
வானத்தை நம் நல்லெண்ண 
சிறகுகளால் அளப்போம்.❤️🔔

Saturday, 16 September 2023

situations

*மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*

_இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ._

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . 

*". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*

_அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்.._..

*இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained""*

_கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று ._

_மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்._

*இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!*

*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*

_கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்._ 

" _வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்_.

""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "
 *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*

_இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் ._
 
இதுதான் சுயநலமான உலகம்!
*This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*

_மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி._

_கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் ._

_எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை ._

_கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்._

_ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_

*இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்* 

*True. Knowledge is nowadays very important than money in this world.*

*இந்தியா இப்படிப்பட்ட திருடர்களா லும், அமைச்சர்களாலும்தான் ஆளப்படுகிறது!பாவம் மக்கள்!*

-படித்ததில் பிடித்தது-

Friday, 18 August 2023

A Monk and a Disciple

Once upon a time, there was a wise Monk and his eager disciple. They traveled together, spreading teachings of peace and wisdom. One day, they came across a river with a strong current. A lady stood there, unable to cross.

The Monk, without hesitation, lifted the lady and carried her across the river. ( The disciple was surprised, but he didn't say anything. They continued their journey.

Hours passed, and the disciple couldn't hold it in any longer. He said, "Master, you carried that woman! Isn't that against our principles?"

The Monk smiled and replied, "I left the woman at the riverbank. But you, my dear disciple, are still carrying her in your mind."

The disciple finally understood. He let go of his worries and started living in the present moment. From then on, he focused on the journey ahead, leaving behind unnecessary burdens.

As Tony Robbins wisely said, "Remember, if you are in your head, you are dead."

So, the act of sharing my struggle with a mental health professional especially my psychologist made me put down the burden of my struggle.


Wednesday, 26 July 2023

ADVOCATES

An Advocate retired and became a Law College Professor.
A student group asked him
"Sir, why do we need an Advocate ?"
The Advocate replied:
"I will present an example for this! Suppose two people come to me, one is very clean and the other is very dirty. I will advise both of them to get clean and take bath."
" Now you guys tell me, who among them will go and take a shower ?? "
One student said: The one who is dirty will take a shower."
The Advocate said: No, the clean person will do it, because he has the habit of bathing, while the dirty does not know the importance of cleaning... Now tell me who will take a shower ?? "
Another student said: The clean person"
The Advocate said: No, the dirty person will take a bath because he is the one who needs cleaning... Now tell who will take a shower ?? "
The two students said: The one who is dirty will take a shower."
The Advocate said: No, both will take a bath because the clean person has a habit of bathing, while the dirty one needs a bath. Now tell me again who will take a shower ?? "
Now the students speak together: Both of them will take a shower."
The Advocate said: Wrong, no one will take a bath, because the dirty is not used to bathing, whereas clean one does not need to bath . So now tell me once again, who will take a shower ?"
One student politely said:
"Sir, you give a different answer every time and every answer seems to be correct. How do we know the correct answer ?? "
The Advocate said:
"This is why you need an Advocate. It is not important what the reality is.
The important thing is, how many possible possibilities and arguments can you offer to prove your point -
AND CHARGE FOR IT

Thursday, 20 July 2023

ஓட்டப் பந்தயம்

கென்யாவின் ஓட்டப்பந்தய வீரரான ஏபெல் முடாய் ஃபினிஷ் லைனில் இருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தார், ஆனால் சிக்னல்களால் குழப்பமடைந்து பந்தயத்தை முடித்துவிட்டதாக நினைத்து நிறுத்தினார்.

ஸ்பானிய ஓட்டப்பந்தய வீரர் இவான் பெர்னாண்டஸ் அவருக்குப் பின்னால் இருந்ததோடு, அவருக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, கென்யா வீரரை தொடர்ந்து ஓடுமாறு கத்தத் தொடங்கினார்.

ஏபெல்லுக்கு ஸ்பானிஷ் தெரியாது, புரியவில்லை.
பெர்னாண்டஸ் அவரை வெற்றி எல்லைக்கு பிடித்து தள்ளினார். 

ஒரு நிருபர் பெர்னாண்டஸிடம், "ஏன் இப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார். 
அதற்கு பெர்னாண்டஸ் பதிலளித்தார், "ஒரு நாள் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வெற்றிபெறச் செய்யும் வகையான வாழ்க்கையை நான் பெற வேண்டும் என்பதே எனது கனவு."

"ஆனால் ஏன் கென்யாவை வெற்றி பெற அனுமதித்தீர்கள்?" செய்தியாளர் மீண்டும் கேட்டார். அதற்கு பெர்னாண்டஸ், "நான் அவரை ஜெயிக்க வைக்கவில்லை, அவர் வெற்றி பெறவேண்டும். இது அவரது பந்தயம்." என்று பதிலளித்தார்.

நிருபர் வற்புறுத்தி மீண்டும் கேட்டார்: "ஆனால் நீங்கள் வென்றிருக்கலாம்!"
பெர்னாண்டஸ் நிருபரைப் பார்த்து, "ஆனால் அது தகுதியான வெற்றி ஆகுமா? அந்த வெற்றி இந்த பதக்கத்தின் மரியாதையை எனக்கு கொடுத்திருக்குமா? கண்டிப்பாக கொடுத்திருக்காது. என்னை பண்புடன் வளர்த்த என் அம்மா என்ன நினைப்பார்?"

நண்பர்களே, மதிப்புகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன.

நாம் நம் குழந்தைகளுக்கு என்ன மதிப்புகளை கற்பிக்கிறோம், அவர்கள் எந்த அளவிற்கு மனிதர்களை சம்பாதிக்க தூண்டுகிறார்கள்? என்பது மிகவும் முக்கியம்.

நண்பர்களே, மற்றவர்களின் பலவீனங்களை பயன்படுத்திக்கொள்ள நினைக்காமல், அதை அவர்களை வலுவாக்க நாம் உதவினால், நம் வெற்றிக்கான பலம் தானாக கிடைக்கும்.